இந்தியாவில் காட்டுயிர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உலகளவில் அதிக புலிகள் வாழும் நாடு இந்தியா
கிர் தேசியப் பூங்காவில் உள்ள ஆசியச் சிங்கம்
செந்நாய். இது அற்றுவிட்ட இனங்களில் ஒன்று. உலகில் 2500 செந்நாய்களே உள்ளன.


இந்தியாவில் காட்டுயிர்கள் என்பது இந்திய எல்லைக்கு உட்பட்ட பல்வேறு வகைகளைச் சார்ந்த காட்டு உயிரிகளை சேர்த்தே குறிக்கிறது.[1] பசு, எருமை, ஆடு, பன்றி, ஒட்டகம் போன்ற வீட்டு விலங்குகள் மட்டுமின்றி, பல்வேறு காட்டு விலங்குகளும் இந்தியாவில் உண்டு. வங்காளப் புலி, ஆசியச் சிங்கம், மான், மலைப்பாம்பு, இந்திய ஓநாய், இந்தியக் குள்ள நரி, கரடி, முதலை, செந்நாய், குரங்கு, பாம்பு, மறிமான், காட்டெருமை, ஆசிய யானை உள்ளிட்ட விலங்குகளும் இந்தியாவில் காணப்படுகின்றன. நூற்று இருபதுக்கும் அதிகமான தேசியப் பூங்காக்களிலும், 18 உயிர்க் காப்பகங்களிலும், 500+ பாதுகாக்கப்பட்ட பகுதிகளிலும் இத்தகைய விலங்குகள் பாதுகாக்கப்படுகின்றன. உயிரி பல்வகைமையைக் கொண்ட மூன்று தலங்கள் இந்தியாவில் உள்ளன. அவை மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர், இமயமலை, இந்தோ-பர்மா பகுதி ஆகியன.[2]

உயிர்க்கோள காப்பகங்கள்[தொகு]

இந்தியாவில் உள்ள உயிர்க்கோள காப்பகங்களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.

இராமேசுவரத்தில் இருந்து மன்னார் வளைகுடா

கீழுள்ள ஒன்பது காப்பகங்களும், உலகளாவிய காப்பகக் கூட்டமைப்பில் உட்படுத்தப்பட்டுள்ளன. இது ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் வழங்கும் பட்டியல்[3]

மேலும் பார்க்க[தொகு]

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]