இந்தளூர்
இந்தளூர் | |
|---|---|
கிராமம் | |
| ஆள்கூறுகள்: 10°47′5.35″N 79°8′31.3″E / 10.7848194°N 79.142028°E | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | தஞ்சாவூர் |
| அரசு | |
| • வகை | ஊராட்சி |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 15 km2 (6 sq mi) |
| ஏற்றம் | 88 m (289 ft) |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 1,862[1] |
| மொழி | |
| • அலுவல் | தமிழ் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 613102 |
| தொலைபேசி குறியீடு | 04362 |
| வாகனப் பதிவு | TN 49 |
| கல்வியறிவு | 75%[1] |
இந்தளூர் என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர் வட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகும்.
அடையாளங்கள்
[தொகு]"கல்லணைக் கால்வாய்,” ”வெண்ணாறு" என்ற இரண்டு ஆறுகள் இந்தலூரில் ஓடுகின்றன. இங்கு மிகவும் பிரபலமான கருப்பசாமி கோயில் உள்ளது. இங்கு சுமார் 10 கோயில்கள் உள்ளன.
மக்கள்தொகை
[தொகு]சமீபத்திய 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்தளூர் மக்கள் தொகை 1862 ஆக இருந்தது. இது 474 குடும்பங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஆண்களின் எண்ணிக்கை 912 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 950 ஆகவும் இருந்தது. இந்தளூரின் சராசரி கல்வியறிவு விகிதம் 75.59 சதவீதமாகும். இது மாநில சராசரியான 80.09 சதவீதத்தை விட குறைவாகும். ஆண்களின் கல்வியறிவு 82.20 சதவீதமாகவும், பெண்களின் கல்வியறிவு 69.33 சதவீதமமாகவும் இருந்தது. இந்தளூரில், மொத்த மக்கள் தொகையில், 178 பேர் 6 வயதிற்குட்பட்டவர்கள். மொத்த மக்கள் தொகையில், 935 பேர் வேலை அல்லது வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். மொத்த மக்கள் தொகையில் 79 சதவீதம் பேர் விவசாயிகளாகவும் 588 பேர் விவசாயத் தொழிலாளர்களாகவும் உள்ளனர். இந்த கிராமம் ஒரு ஊராட்சி மன்றத் தலைவரால் நிர்வகிக்கப்படுகிறது.[1]
போக்குவரத்து
[தொகு]அருகிலுள்ள தொடருந்து நிலையம் சோழகம்பட்டி (SGM) ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "Indalur Population - Thanjavur, Tamil Nadu". 2011 Census of India.