இடை வீட்டு அய்யனார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இடை வீட்டு அய்யனார் கோவில் என்பது தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அய்யனார் கோவிலாகும். தமிழ் நாட்டிலுள்ள தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து 7 கிமீ. தொலைவிலுள்ள சோனகன்விளை என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. 

மூலவர் இடைவீட்டான், இடை வீட்டு அய்யனார், பச்சைத்தண்ணிகாரன் என வேறு பெயர்களிலும் வழங்கப்படுகிறது. இவர் அமர்ந்த நிலையில் பூர்ணம், பொற்கமலம் தேவியருடன் உள்ளார்.

இடை வீட்டு  அய்யனார் கோவில்

இந்தக் கோவில் 400 முதல் 450 ஆண்டுகள் பழமை நிறைந்தது. சோனகன்விளை  கிராமத்தில் .இடை வீட்டு அய்யனார் அழைக்கப்படும் இவர் சிவன் மற்றும் விஷ்ணுவின் மானிட வடிவாக பார்க்கப்படுகிறார். இக்கோவிலில் பௌர்ணமி பூசை, பங்குனி உத்திரம் போன்ற விழாக்கள் நடைபெருகின்றன.

இத்தலம் காவல் தெய்வமாக இருக்ககூடிய சுடலை மாடனின் 21 பந்திகளில் ஒரு பூடமாக இருந்தது.

மேற்படி இங்கு எல்லா மாதமும் இடைவீட்டு அய்யனாருக்கு பௌர்ணமி பூஜை நடப்பது போல் அம்மாவாசை பூஜை மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது.

மேலும் இடைவீட்டு அய்யனார் சிவன் மற்றும் விஷ்ணுவின் மானிட வடிவாக பார்கபடுவதால் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் வரும் பௌர்ணமி அன்று இடைவீட்டு அய்யனாருக்கு அன்னாபிஷேகம் வெகு சிறப்பாக நடத்தப்படட்டு அங்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

இதன்படி மேலும் இடைவீட்டு அய்யனார் பூர்ண புஷ்கலா தேவியர்களுக்கு ஆடிிபூரம் வெகு விமர்சையாக பக்தர்கள் சூழ அய்யனார் மற்றும் தேவியர்க்கு தட்டு வரிசை சுமந்து வந்து பூர்ண புஷ்கலா தேவியர்களுக்கு வளையல் அணிவித்து பக்தர்கள் அனைவரும் இடைவீட்டு அய்யனார் பூர்ண புஷ்கலா தேவியரின் அருளும் ஆசியும் பெற்று செல்கின்றனர்.

கோயிலுக்கு வரும் பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேறிய ஒரு பதிவு கீழே பதிவிட்டு உள்ளோம்.

என் பெயர் சாந்தி. இது எங்க வீட்ல நடந்தது என் தங்கை பேரன் வயது5 பேச்சு வரவில்லை. இடைவீட்டு அய்யனார் கோவிலுக்கு அபிஷேகத்து அன்று வந்து தேன் வாங்கி கொடுத்தாள் .பெளர்ணமி பூஜை அன்று தேன் அபிஷேக ஆரம்பித்த உடன் நன்றாக பேச ஆரம்பித்து விட்டான் என்றும் எங்கள் இடைவீட்டு ஐய்யனார் துணை. இடைவீட்டு ஐய்யனார் பூர்ண புஷ் கலை போற்றி🙏🙏🙏.

இது போன்று நிகழ்வுகளை சொல்லி கொண்டே போகலாம் ஐய்யனின் அருள் ஆசிகளை பற்றி. ஆதாரத்துடன் பதிவிடுகிறேன். குழந்தை பேறு இல்லாத பக்தர்களுக்கு குழந்தை செல்வம் அருளியது. திருமணம் ஆகாதவர்களுக்கு நல்லதுணைஅமைத்து கொடுத்து அவர்கள் வாழ்வில் சந்தோசத்தை ஏற்படுத்தியது என்று பல அர்புதங்களை இன்றும் இடைவீட்டு அய்யனார் பூர்ண புஷ்கலா பக்தர்களின் வாழ்வில் சிறப்புகளை நிகழ்த்தி வருகின்றனர்.

படத்தொகுப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இடை_வீட்டு_அய்யனார்&oldid=3708132" இலிருந்து மீள்விக்கப்பட்டது