இசட் தலைமுறை
இசட் தலைமுறை (Generation Z), மனித தலைமுறைகளை பிரித்து வகுப்பதில் இது ஒரு முறையாகும்.1995ஆம் ஆண்டிற்கும் 2009ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களை "இசட்" தலைமுறையினர் என வகைப்படுத்தியுள்ளனர்.[1]இத்தலைமுறைக்கு முன்னர் பிறந்தவர்களை ஒய் தலைமுறையினர் என்றும், இத்தலைமுறைக்கு பின் பிறந்தவர்களை ஆல்பா தலைமுறையினர் என்றும் அழைப்பர்.
இசட் தலைமுறையினரின் பண்புகள்
[தொகு]இத்தலைமுறையினரில் பெரும்பான்மையோர் மடிக்கணினி, கணினி, டேப்லெட், திறன்பேசி போன்றவைகளை அதிகமாக கையாள்வார்கள். சமூக ஊடகங்களில் நாட்டமுள்ளவர்கள். இணையம் வழியே சமூகச் சிந்தனையையும், இயற்கை குறித்த அறிவையும் வளர்த்து வைத்திருப்பார்கள். விழிப்புணர்வோடு செயல்படுபவர்கள். இத்தலைமுறையினரில் பலர் வாக்கு செலுத்தும் வயதை எட்டிப் பிடிக்காவிட்டாலும் அரசியல் பற்றிய தெளிவோடு இருப்பார்கள்.[2][3]
ஆட்சிக் கவிழ்ப்புகள்
[தொகு]{{முதன்மை|2025 நேபாள இசட் தலைமுறையினர் போராட்டம்]]
- இசட் தலைமுறை இளைஞர்களின் போராட்டங்களால் 2025ஆம் ஆண்டில் நேபாள அமைச்சரவை பதவியிலிருந்து விலகியது.[4]
- மொரோக்கோ நாட்டின் அரசாங்கத்தின் ஊழலை எதிர்த்து 27 செப்டம்பர் 2025 அன்று இசட் தலைமுறையினர் அரசுக்கு எதிராக கலவரங்கள் நிகழ்த்திக் கொண்டு வருகின்றனர்.[5]
இதனையும் காண்க
[தொகு]- தலைமுறை
- பேபி பூமர்கள் - (1946-1964)
- எக்ஸ் தலைமுறை - (பிறப்பு 1965- 1979)
- தலைமுறை ஒய் -(1980-1994)
- இசட் தலைமுறை - (1995-2009)
- ஆல்பா தலைமுறை - (2010-2024)
- பீட்டா தலைமுறை - (2025-2039)