ஆ. குணநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆ. குணநாதன் (பிறப்பு: செப்டம்பர் 13 1965) மலேசியாவில் தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். ஏ.எஸ்.குணா, ஏ.ஜி.கலைதாசன், ஏ.எஸ்.ஜி. ஆகிய புனைப்பெயர்களிலும் எழுதிவரும் இவர் ஆசிரியராகத் தொழில்புரிந்து வருகின்றார்.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1982-ஆம் ஆண்டு தொடத்திலிருந்து சிறுகதைகள், ஹைக்கூ கவிதைகள், பேட்டிக் கட்டுரைகள் போன்ற பல துறைகளிலும் பங்களிப்பு நல்கிவரும் இவரின் இத்தகைய ஆக்கங்களை மலேசியா தேசிய பத்திரிகைகளும், இதழ்களும் பிரசுரித்துள்ளன. மலேசியா வானொலி ஒலிபரப்பியுள்ளது.

ஊடகத்துறையில்[தொகு]

இவர் மயில், தினமுரசு, புதிய பூச்செண்டு (தமிழ்நாடு) ஆகிய இதழ்களில் பகுதி நேரமாக நிருபராகவும் பணியாற்றியுள்ளார்.

பரிசுகள்[தொகு]

  • தேசிய நிலநிதிக் கூட்டுறவுச் சங்கத்தின் கட்டுரைப் போட்டியில் மாணவர் பிரிவில் முதல் பரிசு (1998)
  • தேசிய நிலநிதிக் கூட்டுறவுச் சங்கத்தின் சிறுகதைப் போட்டியில் மாணவர் பிரிவுப் பரிசு (2001)
  • மலாயாப் பல்கலைக் கழகப் பேரவைச் சிறுகதைப் போட்டியில் மாணவர் பிரிவுப் பரிசு (1999)
  • தமிழ் எழுத்தாளர் தின கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு (2003)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆ._குணநாதன்&oldid=3232598" இலிருந்து மீள்விக்கப்பட்டது