ஆல்பிரெஃக்ட் டியூரெ (/ˈdʊərər,ˈdjʊərər/;[1] இடாய்ச்சு: [ˈalbʁɛçt ˈdyːʁɐ]; (மே 21, 1471– ஏப்ரல் 6, 1528)[2] என்பவர் ஜெர்மன் ஓவியரும். அச்சுருவாக்கக் கலைஞரும் ஆவார். இவர் ஜெர்மனியில் நியூரெம்பர்கில் பிறந்தார். இவருடைய புகழ்பெற்ற கீறுங்கலைப் படைப்புகள்:வீரன், சாவு, சாத்தான் (1513), புனித செரோம் படித்துக்கொண்டிருத்தல் (1514) , வருத்தம் (1514). இவற்றை விரிவாக திறனாய்வாளர்கள் பலகாலமாக அலசி வந்திருக்கின்றார்கள். இவருடைய நீர்ச்சாந்து (water color) இயற்கைக் காட்சிப் படங்கள் ஐரோப்பாவிலேயே முன்னோடியானதும், சிறந்தவை என்றும் புகழ்பெற்றவை. இவருடைய மரக்கட்டை அச்சுப் (woodcut) படங்கள் இத்துறையில் புதுமைகள் படைத்தவை. இவை இத்துறையில் இவருடைய நுட்ப முறைகளால் எவ்வளவு வளர்ச்சிகள் அடைய வாய்ப்புகள் உள்ளன என்று காட்டியது. ஆல்பிரெஃக்ட் டியுரே இத்தாலிய மறுமலர்ச்சிக் கலைஞர்களுடைய கலைநுணுக்கத்தை உணர்ந்தும், ஜெர்மனியின் அறிவுசார்ந்த அறக்கொள்கையரின் கொள்கைகளை அறிந்தும், அதனை தன்னுடைய கலைப்படைப்புகளில் வெளிப்படுத்தியமையால் இவருக்கு நிலைத்த புகழை ஈட்டுத் தந்துள்ளன. இவை மட்டுமல்லாமல் இவருடைய கணிதம் சார்ந்த உருவத் தோற்றங்களும், சரியான உடலுருவ விகிதங்கள் பற்றிய அறிவும் கொண்டு இவர் ஆக்கிய படைப்புகள் வரலாற்றில் நிலைத்த இடத்தைப் பெற்றுத் தந்துள்ளன. ரபாயல், ஜியோவானி பெல்லினி மற்றும் லியோனார்டோ டா வின்சி உள்ளிட்ட முக்கிய இத்தாலிய கலைஞர்களுடன் அவர் தொடர்பு கொண்டிருந்தார்.
டியுரே 1471 ஆம் ஆண்டில் மே மாதம் 21 ஆம் திகதி தம் பெற்றோர்களுக்கு மூன்றாவது பிள்ளையாகப் பிறந்தார். அத்துடன் அவர் தம் பெற்றோர்களுக்கு இரண்டாவது ஆண் பிள்ளையுமாவார். இவரின் பெற்றோர்களுக்கு பதினான்கு முதல் பதினெட்டு பிள்ளைகள் வரை இருந்துள்ளனர். டியுரேயின் தந்தையின் பெயர் அஜ்டொசி (Ajtósi) என்பதாகும், அவர் ஒரு பொற்கொல்லன் ஆவார். ஜெர்மானியப் பெயரான டியுரே ஹங்கேரிய மொழியில் இருந்து மொழி பெயர்க்கப்பட்டதாகும். பிற்காலத்தில் டியுரே எனும் பெயர் ரியுரே என மாற்றப்பட்டது. அதுவே குடும்பப் பெயராகவும் மாற்றப்பட்டது.
டியூரே தன்னுடைய மனைவி ஆக்னஸ் ஃப்ரே யின் சுய உருவப் படத்தை 1494 ஆம் ஆண்டில் வரைந்த போது
1942 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் டியூரே பாஸ்லே நகரத்திற்குச் சென்றாரர் . மேலும் அங்குள்ள தனது சகோதரனுடைய வீட்டில் தங்கினார்.[3] சிறிது காலத்திலேயே தனது சொந்த ஊருக்குத் திரும்பிச் சென்றார். சூலை 7,1494 ஆம் ஆண்டில் தன்னுடைய 23 ஆம் வயதில் ஆக்னஸ் ஃப்ரே என்பவரை மணந்து கொண்டார். ஆனால் அவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை
திருமணம் ஆகி மூன்றுமாதத்திற்குள் இத்தாலிக்குத் தனியாகச் சென்றார். ஏனெனில் அங்கு உலகம்பரவுநோய் பரவி வந்தது. மேலும் அங்கு சென்று கலை உலகின் மாற்றங்களை கற்றுத் தேர்ந்தார்.[4]
↑Müller, Peter O. (1993) Substantiv-Derivation in Den Schriften Albrecht Dürers, Walter de Gruyter. ISBN3-11-012815-2.
↑Here he produced a woodcut of St Jerome as a frontispiece for Nicholaus Kessler's 'Epistolare beati Hieronymi'. Panofsky argues that this print combined the 'Ulmian style' of Koberger's 'Lives of the Saints' (1488) and that of Wolgemut's workshop. Panofsky:21
↑Lee, Raymond L. & Alistair B. Fraser. (2001) The Rainbow Bridge, Penn State Press. ISBN0-271-01977-8.