ஆலுவா மகாதேவர் கோயில்
ஆலுவா சிவன் கோயில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | கேரளம் |
மாவட்டம்: | எர்ணாகுளம் மாவட்டம் |
அமைவு: | பெரியாறு |
ஆள்கூறுகள்: | 10°07′01″N 76°21′13″E / 10.1168843°N 76.3535963°E |
கோயில் தகவல்கள் | |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | கேரளபாணி கட்டிடக்கலை |
ஆலுவா மகாதேவர் கோயில் (Aluva Mahadeva Temple) என்பது ஒரு பழமையான சிவன் கோவில் ஆகும். இந்தக் கோயில் இந்திய மாநிலமான கேரள மாநிலத்தின், எர்ணாகுளம் மாவட்டம், ஆலுவாவில், பெரியாறு ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. [1] இக்கோயிலின் பிரதான தெய்வமான சிவன், முதன்மைக் கருவறையில், மேற்கு நோக்கி அமைந்துள்ளார். நாட்டுப்புறக் கதைகளின்படி, பரசுராமர் இங்கு சிவனை நிறுவினார் எனப்படுகிறது. இது கேரளத்தின் 108 சிவன் கோயில்களின் ஒரு பகுதியாகும். [2] இந்த கோயில் பூக்காட் சந்திப்பிலிருந்து 4 கி.மீ தொலைவில் பூகாட் - தோரைகடவு சாலையில் அமைந்துள்ளது. [3] இந்தக் கோயிலின் விழாவாக நடத்தப்படும் ஆலுவா சிவராத்திரி விழா ஒரு புகழ்பெற்ற திருவிழா ஆகும்.
மேலும் காண்க[தொகு]
மேற்கோள்கள்கள்[தொகு]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-11-22. பார்க்கப்பட்ட நாள் 2020-01-28.
- ↑ "108 Shiva Temples in Kerala created by Lord Parasurama". Vaikhari. பார்க்கப்பட்ட நாள் 2014-11-06.
- ↑ "Manappuram Sree Mahadeva Temple". Manappuram Sree Mahadeva Temple (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-11-22.