உள்ளடக்கத்துக்குச் செல்

ஆலுவா அரண்மனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆலுவா அரண்மனை
Aluva Palace
பொதுவான தகவல்கள்
கட்டிடக்கலை பாணிகேரளக் கட்டிடக்கலை
நகரம்ஆலுவா
நாடுஇந்தியா
கட்டுவித்தவர்திருவிதாங்கூர் மகாராசா

ஆலுவா அரண்மனை (Aluva Palace) திருவாங்கூர் சேர மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் 1900 ஆம் ஆண்டில் மன்னர் மகாராசா கார்த்திகைத் திருநாள் தர்ம ராசாவால் கட்டப்பட்ட திருவாங்கூர் அரச அரண்மனையாகும்.[1] ஆல்வாய் அரண்மனை என்றும் இது அழைக்கப்படுகிறது. ஆலுவா அரண்மனை கேரள மாநிலத்தின் எர்ணாகுளம் மாவட்டம் கொச்சி நகரில் அமைந்துள்ளது.

வரலாற்று முக்கியத்துவம்

[தொகு]

அரண்மனை ஒரு காலத்தில் திருவிதாங்கூர் அரச குடும்பத்தினரால் ஒரு குடியிருப்பாகப் பயன்படுத்தப்பட்டதாக வரலாற்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.[2] பெரியார் ஆற்றின் கரையில் அமைந்துள்ள இந்த நினைவுச்சின்னம்[3] அரச குடும்பத்தை பார்வையிடும் மக்களுக்கு விருந்தினர் மாளிகையாகவும் செயல்பட்டது.[4] 1991 ஆம் ஆண்டில் திருவாங்கூரின் கடைசி மன்னர் சித்திரை திருநாள் பலராம வர்மா இறந்த பிறகு அரண்மனை கேரள மாநில அரசால் கையகப்படுத்தப்பட்டது, கேரள அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த அரண்மனை இப்போது விருந்தோம்பல் மையமாக செயல்படுகிறது.[5][6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Historic grandeur". The New Indian Express. Retrieved 2020-10-21.
  2. "Alwaye Palace Aluva - Aluva Palace Kerala". kerala-tourism.org. Retrieved 2020-10-21.
  3. "കുളിർകാറ്റ്, കിളിപ്പാട്ട്; ഹരിതവനത്തിലൂടെ നല്ലനടപ്പ്". ManoramaOnline (in மலையாளம்). Retrieved 2020-10-21.
  4. Manoj (2014-07-10). "Aluva, Of Rivers and History". nativeplanet.com (in ஆங்கிலம்). Retrieved 2020-10-21.
  5. "Agriculture". Mathrubhumi. Retrieved 2020-10-21.
  6. "ஆலுவா". www.jeyamohan.in. Retrieved 2021-05-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலுவா_அரண்மனை&oldid=3597967" இலிருந்து மீள்விக்கப்பட்டது