ஆலும் வேலும்


"ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி" என்பது ஒரு புகழ்பெற்ற தமிழ்ப் பழமொழியாகும். ஆலமரக் குச்சியும், வேலமரக்[1] குச்சியும் பல் விளக்கும் பற்தூரிகையாகப் பயன்படுத்தினால், பல்லும் பல் ஈறும் வலிமையுடன் இருக்கும் என்பது இதன் முதலடியின் பொருள்.[2] அடுத்த அடியில் வரும் நாலும், இரண்டும் என்பவை முறையை நாலடியாரையும், திருக்குறளையும் குறிப்பன.[3][4] கையில் பிடித்து பல் விளக்க (பல் துலக்க) வசதியாக ஏறத்தாழ 20 செ. மீ. நீளம் (8 அங்குலம் அல்லது 1-1.5 சாண் நீளம்) உடையதாக ஆலம், வேலம் குச்சிகளை வெட்டி, ஒரு முனையை கல்லாலோ, சுத்தியலாலோ இலேசாக தட்டி, சிறிதளவு நசுக்கி தூரிகைபோல் ஆக்கி பல் விளக்கப் பயன்படுத்த வேண்டும். பல் விளக்கும் பொழுது பல்லால் கடித்து மேலும் தேவைக்கு ஏற்றார்போல குச்சியின் நுனியை நைக்கலாம். குச்சியால் தேய்க்கும் பொழுதும் கடிக்கும்பொழுதும் வாயில் ஊறும் உமிழ்நீரை வெளியே துப்பிவிட வேண்டும். ஆலமர வேலமர குச்சிகளால் உண்மையான மருத்துவப்பயன் என்ன, அல்லது ஏதும் பயன் உள்ளதா என்பதும் இன்னும் அறியப்படவில்லை. வேலமரக் குச்சியில் பல் துலக்கும் பழக்கம் ஆப்பிரிக்கா, இந்தியத் துணைக்கண்டம் ஆகிய பகுதிகளில் உள்ளது.[5] இயற்கையில் கிடைக்கும் பொருள் என்பதும், சுற்றுச்சுழலைக் கெடுக்காத பொருள் என்பதும் உண்மை. மரக்குச்சி ஆகையால் இயல்பாய் மண்ணுடன் எளிதில் மருகி சிதைவுறும் பொருள்.
பரவலர் பண்பாட்டில்
[தொகு]1993 ஆம்டு வெளியான எஜமான் திரைப்படத்தில் இடம்பெற்ற புகழ்பெற்ற பாடலான ஆலப்போல் வேலப்போல் என்ற பாடல் வரிகள் இந்தப் பழமொழியின் தாக்கத்தால் எழுதப்பட்டவை.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ இது நம்ம கருவேலம்! | ஆயிரம் மலர்களே மலருங்கள் 11, ஆதி வள்ளியப்பன், இந்து தமிழ் திசை, 18 அக்டோபர் 2025
- ↑ ஆலும், வேலும் பல்லுக்பு உறுதி- தினமணி, 16. நவம்பர். 2015
- ↑ "a071212". www.tamilvu.org. Retrieved 2025-03-01.
- ↑ நாலடியாரின் சீரடிகள், தினமணி, 10. பெப்ரவரி. 2019
- ↑ Saurabh Rajvaidhya et al. (2012) "A review on Acacia Arabica, an Indian medicinal plant" International Journal of Pharmaceutical Sciences and Research Vol 3(7) pp 1995-2005
- ↑ "தமிழ் பாடல் வரிகள், Tamil Song Lyrics, subhashini.org". www.subhashini.org. Retrieved 2025-03-01.