ஆலிடே தீவு வனவிலங்கு சரணாலயம்
ஆலிடே தீவு வனவிலங்கு சரணாலயம் (Haliday Island Wildlife Sanctuary) இந்தியாவில் காணப்படும் பல வனவிலங்கு சரணாலயங்களில் ஒன்றாகும். ஆலிடே வனவிலங்கு சரணாலயம் என்ற பெயராலும் இதை அழைக்கிறார்கள். மேற்கு வங்காள மாநிலத்தில் சுமார் 6 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இந்த வனவிலங்கு சரணாலயம் அமைந்திருக்கிறது. இச்சரணாலயம் சுந்தரவனக் காடுகள் உயிகோளக் காப்பகத்தின் ஒரு பகுதியாகும் [1]. 1989 ஆம் ஆண்டில் சுந்தரவனக்காடு மண்டலம் முழுவதும் அதிகாரப்பூர்வமாக உயிகோளக் காப்பகமாக மாறியது. இங்குள்ள வனவிலங்கு மிகுந்த பகுதிகள் யாவும் சுற்றுச்சூழல் மனப்பான்மையுடைய சுற்றுலாத்தலமாக கருதப்படுகின்றன. மேற்கு வங்காளத்தில் பாயும் மட்லா நதியின் கரையில் இச்சரணாலயம் அமைந்துள்ளது [1][2].
பலவிதமான தாவர வகைகள் மற்றும் வனவிலங்கு வகைகள் ஆலிடே சரணாலயத்தில் உள்ளன. காட்டுப்பன்றி மற்றும் புள்ளி மான்கள் ஆகியவற்றை இங்குள்ள விலங்கு வகைகளுக்கு எடுத்துக்காட்டுகளாகக் கூறலாம். வங்கப்புலிகள் எப்போதாவது இந்த பகுதிக்கு வந்து போகின்றன [1].
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 1.2 Das, Joydeb (May 2015). Tourist Guide Book of Sundarbans. பக். 34. https://books.google.com/books?id=iX7wCAAAQBAJ&pg=PA12&dq=%22Haliday+Wildlife+Sanctuary%22&hl=en&sa=X&ved=0CC4Q6AEwAGoVChMIkJPlmq7wxwIVUAOSCh1CKwcK#v=onepage&q=%22Haliday%20Wildlife%20Sanctuary%22&f=false.
- ↑ "Weekend Breaks From Kolkata". The Indian Panorama. August 8, 2014. http://www.theindianpanorama.news/en/travel-news/weekend-breaks-from-kolkata-24437/. பார்த்த நாள்: September 11, 2015.
புற இணைப்புகள்[தொகு]
- 'West Bengal Wildlife Sanctuaries' பரணிடப்பட்டது 2008-12-22 at the வந்தவழி இயந்திரம் - wildbengal.com