திருவாலவாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஆலவாய் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஆலவாய் என்ற பெயரைக் கொண்ட மற்றொரு ஊரைப் பற்றி அறிய, ஆலுவா என்ற பக்கத்தைப் பார்க்கவும்.

திருவாலவாய் என்பது புராணங்களில் குறிப்பிடப்படும் தொன்மவியல் பாண்டியர்களின் தலை நகரங்களுள் ஒன்று. கீர்த்தி பூசன பாண்டியன் ஆட்சியில் தலைநகரம் தென்மதுரையிலிருந்து இங்கு மாற்றப்பட்டது.[1]

ஊழியிலும் அழிவுராத இடங்கள்[தொகு]

பாண்டியர்களின் முந்தைய தலைநகரமான மதுரை (தென்மதுரை) கடலுக்கு இரையானாலும் அதில் சில உயர்ந்த இடங்கள் மட்டும் அழிவிலாமல் இருந்ததாக உளது. அவை:[2]

  1. நீண்ட விழிகளையுடைய உமையம்மையின் திருக்கோயில்
  2. வானினின்றும் இறங்கிய இந்திரவிமானம்
  3. பொற்றாமரை குளம்,
  4. இடபக்குன்றம் - மாட்டின் உருவத்தோடு உள்ள மலை.
  5. கரிவரை - யானைமலை
  6. நாகக்குன்றம் - நாகமலை
  7. ஆன் இழிவரை - பசுமலை
  8. வராகவரை - பன்றிமலை

மேற்கோள்கள்[தொகு]

  1. எழில்புனை யதுல கீர்த்தி யெனவிரு பத்தி ரண்டு வழிவழி மைந்த ராகி வையங் காத்த வேந்தர் பழிதவி ரதுல கீர்த்தி பாண்டியன் றன்பா லின்பம் பொழிதர வுதித்த கீர்த்தி பூடணன் புரக்கு நாளில். - திருவாலவாயான படலம், திருவிளையாடல் புராணம்
  2. தேனிழி குதலைத் தீஞ்சொற் சேனெடுங் கண்ணி கோயில் வானிழி விமானம் பொற்றா மரைவிளை யாட்டின் வந்த கானிழி யிடபக் குன்றங் கரிவரை நாகக் குன்றம் ஆனிழி வரைவ ராக வரைமுத லழிவி லாத. - திருவாலவாயான படலம், திருவிளையாடல் புராணம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவாலவாய்&oldid=3497251" இலிருந்து மீள்விக்கப்பட்டது