ஆலம்பாடி பாறை ஓவியங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆலம்பாடி பாறை ஓவியங்கள், விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோவிலூரில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஆலம்பாடி என்னும் இடத்தில் உள்ள பாறை ஓவியங்கள் ஆகும்.[1] ஆலம்பாடி ஊரின் மேற்குப்புறத்தில் அமைந்த இயற்கைப் பாறைகளின் மேற்பரப்பில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.[2]

இவை மான், மாடு, பன்றி போன்ற விலங்குகளைக் குறிக்கும் ஓவியங்களாகக் காணப்படுகின்றன. விலங்குகளின் உள்ளுறுப்புக்களைக் காட்டும் எக்ஸ் - கதிர் வடிவம் எனும் பாணியில் வரையப்பட்ட ஓவியங்கள் இங்கு உள்ளன. தமிழ்நாட்டிலுள்ள பாறை ஓவியங்களில் இவ்வாறான ஓவியங்கள் இவ்விடத்திலேயே முதல் முதலாகக் கண்டுபிடிக்கப்பட்டன.[3] இவ்வோவியங்கள் கோட்டுரு முறையில் வரையப்பட்டுள்ளன. இங்கு சில இடங்களில் காணப்படும் இரட்டைப் படைப் பூச்சு, பழைய ஓவியத்தின் மீது மீண்டும் கோடுகள் வரையப்பட்டதைக் காட்டுவதாகக் கருதப்படுகிறது.[4]

இது அரசின் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னம் ஆகும்.

காலம்[தொகு]

இங்கே காணப்படும் ஓவியங்கள் வெவ்வேறு காலகட்டங்களைச் சேர்ந்தவை. இவற்றுள் இடைக்கற்காலம் அல்லது அதற்கு முந்திய காலப் பகுதியைச் சேர்ந்த ஓவியங்களும், புதியகற்காலம்/செப்புக்காலத்தைச் சேர்ந்த ஓவியங்களும் அடங்கும்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "பாறை ஓவியங்கள் - ஆலம்பாடி". Archived from the original on 2021-06-23. பார்க்கப்பட்ட நாள் 2021-06-23.
  2. Kannan, R., 2007, p. 58
  3. Kannan, R., 2007, p. 58
  4. பவுன்துரை, இராசு., 2001, பக். 96, 97
  5. Kannan, R., 2007, p. 58

உசாத்துணைகள்[தொகு]

  • பவுன்துரை, இராசு., தமிழகப் பாறை ஓவியங்கள், மெய்யப்பன் தமிழாய்வகம், சிதம்பரம், 2001.
  • Kannan, R., Manual on Conservation and Restoration of Monuments, Government Museum, Chennai, 2007.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலம்பாடி_பாறை_ஓவியங்கள்&oldid=3586121" இலிருந்து மீள்விக்கப்பட்டது