ஆர். வாசுதேவன்
ஆர். வாசுதேவன் R. Vasudevan | |
---|---|
பிறப்பு | மார்ச்சு 27, 1942 தமிழ்நாடு, India |
இறப்பு | 25 சூலை 2010 | (அகவை 68)
பணி | ஆட்சிப் பணியாளர் |
விருதுகள் | பத்மசிறீ |
ஆர். வாசுதேவன் (R. Vasudevan) ஓர் இந்திய ஆட்சிப்பணி அலுவலராவார்.[1] இராசீவ் காந்தி இந்தியப் பிரதமராக இருந்த போது அவருடைய சிறப்புச் செயலாளராகவும்[2] இந்திய அரசாங்கத்தின் எஃகு அமைச்சகம் மற்றும் மின் அமைச்சக செயலாளராகவும் பணியாற்றினார்.[3] தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் பிறந்த வாசுதேவன் தில்லி பல்கலைக்கழகத்தில் பொருளாதாரமும் ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.[3] 2010 ஆண்டு சூலை மாதம் 25 அன்று வாசுதேவன் இறந்தார்.[4] இந்திய அரசு இவருக்கு மரணத்திற்குப் பின் 2015 ஆம் ஆண்டில் இந்தியாவில் வழங்கப்படும் நான்காவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்மசிறீ விருதை வழங்கி கௌரவித்துள்ளது.[5]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Indian Express". Indian Express. 2015. 10 March 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ http://archives.digitaltoday.in/businesstoday/20040620/trends2.html
- ↑ 3.0 3.1 "Babus of India". Babus of India. 2015. 10 March 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Tribute to Mr R Vasudevan (IAS Retd)". The Times of India. 25 July 2012. 14 August 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Padma Awards". Padma Awards. 2015. 26 January 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 16 February 2015 அன்று பார்க்கப்பட்டது.