ஆர். இந்திரகுமாரி
ஆர். இந்திரகுமாரி என்பவர் ஒரு இந்திய அரசியலவாதி மற்றும் முன்னாள் தமிழக அமைச்சராவார். இவர் தமிழக சட்டமன்றத்துக்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நாட்ராம்பள்ளி தொகுதியில் இருந்து 1991 தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இவர் ஜெ. ஜெயலலிதா தலைமையிலான அரசில் சமூக நலத்துறை அமைச்சராக 1991 முதல் 96 வரை பொறுப்பு வகித்தார். இவர் 2006இல் தி.மு.க வில் இணைந்தார்.[2][3]
ஊழல் வழக்கில் சிறை தண்டனை[தொகு]
1991-96 காலகட்டத்தில் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் சமூக நலத் துறை அமைச்சராக இந்திராகுமாரி இருந்த போது அவர் மீது 1997-இல் பள்ளி மாணவர்களுக்கான இலவசப் பொருட்களை வாங்கியதில் ஊழல் செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் இந்திராகுமாரிக்கு 29 செப்டம்பர் 2021 அன்று 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. [4][5]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "1991 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). 2010-10-07 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2016-01-31 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Scam Count
- ↑ Chennai Corner
- ↑ அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் இந்திர குமாரி மற்றும் கணவருக்கு ஊழல் வழக்கில் 5 ஆண்டு சிறை
- ↑ ஊழல் வழக்கு : அதிமுக முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி குற்றவாளி என தீர்ப்பு