ஆரட்டதேசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆரட்டதேசம் இமயமலையில் கங்கை உற்பத்தியாகும் இடத்தில் தெற்கிலும், நேபாளதேசத்திற்கு கிழக்கில், கிழக்கு மேற்காக நீண்டு பரவி இருந்த தேசம்.[1]

இருப்பிடம்[தொகு]

இந்த தேசத்தில் பூமி முழுவதும் எப்பொழுதும் இடைவிடாத பனி, மழை, குளிர் இவைகள் அதிகமாக இருக்கும்.[2]

மலை, காடு, விலங்குகள்[தொகு]

இந்த தேசத்திற்கு நடுவில் பெரியமலையும், குன்றுகளும், அடர்ந்த காடுகளாலும், பெரியமலைகளினாலும், சூழப்பட்டுள்ளதால், இதை மலை நாடு என்றே அழைப்பதுண்டு. இத்தேசத்தின் காடுகளில் வெள்ளைக்குதிரைகளும், வெண்மை ஆடுகளும் கொடிய காட்டு விலங்குகளும் அதிகம் உண்டு.

நதிகள்[தொகு]

இந்த ஆரட்டதேசத்தில் இமயமலையிலிருந்து உருவாகி தெற்கு நோக்கி ஓடுகிற நதி கண்டகீ இந்த தேசத்தை செழிக்க வைக்கின்றது. [3]

கருவி நூல்[தொகு]

சான்றடைவு[தொகு]

  1. "புராதன இந்தியா"-பி. வி. ஜகதீச அய்யர்-1918 - Published by- P. R. Rama Iyer & co-madaras
  2. புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009- பக்கம் - 201 -
  3. புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009- பக்கம் - 202 -
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆரட்டதேசம்&oldid=2076851" இலிருந்து மீள்விக்கப்பட்டது