ஆயக்குடி கைலாச நாதர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு கைலாச நாதர் கோயில்,ஆயக்குடி,திருவாரூர்
பெயர்
புராண பெயர்(கள்):ஆயக்குடி
பெயர்:அருள்மிகு கைலாச நாதர் கோயில்,ஆயக்குடி,திருவாரூர்
அமைவிடம்
ஊர்:ஆயக்குடி
மாவட்டம்:திருவாரூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:கைலாச நாதர்
தாயார்:விசாலாட்சி
சிறப்பு திருவிழாக்கள்:திருக்கார்த்திகை, மகா சிவராத்திரி, திருவாதிரை, கந்த சஷ்டி.

ஆயக்குடி கைலாச நாதர் கோயில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.

அமைவிடம்[தொகு]

இக்கோயில் திருவாரூர் மாவட்டத்தில் ஆய்க்குடி என்னுமிடத்தில் அமைந்துள்ளது.[1]

இறைவன், இறைவி[தொகு]

இக்கோயிலின் மூலவராக கைலாசநாதர் உள்ளார். இங்குள்ள இறைவி விசாலாட்சி ஆவார். [1]

சிறப்பு[தொகு]

திருவாரூர் மற்றும் அதனைச் சுற்றி அமைந்துள்ள கோயில்களுக்கு தினமும் பூசை தொடர்ந்து நடப்பதற்காக ஆய்க்குடி என்ற ஒரு கிராமமே உருவாக்கப்பட்டதாகக் கூறுவர். அக்கோயில்களுக்கு விளக்கெரிப்பதற்காக எண்ணெய் இங்கிருந்து அனுப்பப்பட்ட பெருமையை உடையது.[1]

திருவிழாக்கள்[தொகு]

ஐப்பசி அன்னாபிசேகம், கார்த்திகைத் திருவிழா போன்ற விழாக்கள் இக்கோயிலில் கொண்டாடப்படுகின்றன. [1]

மேற்கோள்கள்[தொகு]