ஆனந்திபாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேஷ்வின்
ஆனந்தி
பாய்
பிறப்புகுஹாகர், மராட்டியப் பேரரசு
வாழ்க்கைத்
துணை
இரகுநாதராவ்
பிள்ளைகள்இரண்டாம் பாஜி ராவ் மற்றும் இருவர்.
உறவினர்கள்இரகு மகாதேவ்

ஆனந்திபாய் (Anandibai) என்பவர் மராத்தியப் பேரரசின் பிரதம அமைச்சராக 1773 முதல் 1774 முடிய பணியாற்றியவரும் மராத்திய பேஷ்வா முதலாம் பாஜிராவின் மகனுமான ரகுநாதராவ் என்பவரின் மனைவியாவார். 17 வயதான தனது மருமகன், பேஷ்வா நாராயணராவ் இறப்பதற்கு இவர் சதி செய்தார். இவரது கணவர் நாராயணராவ் இறந்த பிறகு அப்பதவிக்கு வரவிருந்தார்.

ஆரம்பகால வாழ்க்கையும் திருமணமும்[தொகு]

இப்போது மகாராட்டிரா மாநிலத்தில் உள்ள கொங்கண் பிராந்தியத்தில் உள்ள குஹாகர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு கொங்கணஸ்த் பிராமணக் குடும்பத்தில் இரகு மகாதேவ் ஓக்கின் என்பவருக்கு மகளாக ஆனந்திபாய் பிறந்தார். [1] இவரது உறவினர் கோபிகாபாய் (ராஸ்ட் குடும்பத்தைச் சேர்ந்தவர்), பேஷ்வா பாலாஜி பாஜிராவின் மனைவியாவார். திசம்பர் 1756 இல், ஆனந்திபாய் குழந்தையாக இருந்தபோதே, பாலாஜி பாஜி ராவின் தம்பியான இரகுநாதராவுக்கு [2] இரண்டாவது மனைவியானார். இரகுநாதராவின் முதல் மனைவி (பார்வே குடும்பத்தைச் சேர்ந்த ஜானகி பாய்) ஆகத்து 1755 இல் இறந்துவிட்டார்.

பாலாஜி மற்றும் இரகுநாத் இருவரும் மராட்டிய பேரரசின் முதல் பேஷ்வாவான பாஜி ராவ் மகன்கள். பேஷ்வாவின் நிலைப்பாடு சத்ரபதி (மன்னர்) செய்த நிர்வாக நியமனம், அது உண்மையில் பரம்பரை அல்ல. உண்மையில், பாஜிராவ் நான் அவரது குடும்பத்தில் இருந்து பேஷ்வா என்று பெயரிடப்பட்ட இரண்டாவது மனிதராவார்.

நாராயணராவ் படுகொலை[தொகு]

சனிவார்வாடா- நாராயணராவ் படுகொலைக்கான சதி வெளிவந்த இடம்

பேஷ்வா இளைய மாதவராவின் அரச காப்பாளராகப் பணியாற்றியவர் இரகுநாதராவ். ஐதராபாத் நிசாமுடன் கூட்டு சேர்ந்து இளைய மாதவராவை ஒழித்துக் கட்டி, தான் பேஷ்வா பதவியில் அமர திட்டமிட்ட இரகுநாதராவைக் கைது செய்து வீட்டுச் சிறையில் அடைத்தனர்.

1772ல் முதலாம் மாதவராவ் இறந்த பின்னர், பேஷ்வா பதவியேற்ற அவரது இளைய தம்பி நாராயண ராவின் பாதுகாவலராக இரகுநாதராவ் நியமிக்கப்பட்டார். சனிவார்வாடா அரண்மனையில் இரகுநாதராவ், தனது மனைவி ஆனந்திபாயுடன் சேர்ந்து, நாராயண ராவைக் கொலை செய்தார். [3][4]

பேஷ்வாவைக் கொலை செய்த காரணத்தினால், இரகுநாதராவ் நாடு கடத்தப்பட்டார். நாடு கடத்தப்பட்ட இரகுநாதராவ், 6 மார்ச் 1775 அன்று பிரித்தானியர்களுடன் செய்து கொண்ட உடன்படிக்கையின்படி, தானே, வசாய் மற்றும் சஸ்டி நகரங்கள் பிரித்தானியர் வசம் ஒப்படைப்பது என்றும், அதற்கு பிரதிபலனாக, இரகுநாதராவை பேஷ்வா பதவியில் நியமிப்பது என முடிவானது.[5]

11 திசம்பர் 1783ல் இரகுநாதராவ் மரணமடைந்தார். அவரது மரணத்துக்குப் பின்னர் இரகுநாத ராவின் மகன்களான இரண்டாம் பாஜி ராவ், இரண்டாம் சிம்மாஜி ராவ் மற்றும் மனைவி ஆனந்திபாய் பேஷ்வாவின் அமைச்சரான நானா பட்நாவிசின் கட்டுப்பாட்டில் இருந்தனர்.

பேஷ்வா இரண்டாம் மாதவ ராவின் இறப்பிற்குப் பின் இரண்டாம் பாஜி ராவை மராத்தியப் பேரரசின் பேஷ்வா பதவியில் அமர்த்தினர்.[6]

பிற்கால வாழ்வு[தொகு]

இவரும் இவரது கணவரும் நானா பட்நாவிசின் படைகளிலிருந்து தப்பி ஓடிக்கொண்டிருந்தபோது, 1775 சனவரி 10 ஆம் தேதி பவார்களின் கட்டுப்பாட்டின் கீழ் தார் கோட்டையில் இரண்டாம் பாஜிராவை பெற்றெடுத்தார். [7]

1783 திசம்பர் 11 அன்று, இவரது கணவர் ரகுநாதராவ் இறந்தார். [8]

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. Gune, Vithal (1996), Survey and Calendar of Marathi Documents, K.P. Bagchi, ISBN 978-81-7074-166-4, retrieved 2009-01-14
  2. Turner, O. (1904), Journal of the Bombay Branch of the Royal Asiatic Society, The Society, retrieved 2009-01-14
  3. Preeti Panwar. "Top 10 most haunted places in India". Zee News. http://zeenews.india.com/slideshow/top-10-most-haunted-places-india_39.html. பார்த்த நாள்: 21 July 2015. 
  4. Huned Contractor (31 October 2011). "Going ghost hunting". Sakal. http://www.sakaaltimes.com/NewsDetails.aspx?NewsId=5090271538838429700&SectionId=5131376722999570563&SectionName=Features&NewsDate=20111031&NewsTitle=Going%20ghost%20hunting. பார்த்த நாள்: 21 July 2015. 
  5. Naravane, M.S. (2014). Battles of the Honorourable East India Company. A.P.H. Publishing Corporation. பக். 54–55. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788131300343. 
  6. The Asiatic Journal and Monthly Register for British and Foreign India, China, and Australia, Volume 10. Parbury, Allen, and Company. 1833. பக். 22. https://books.google.ca/books?id=TyELAQAAMAAJ&pg=RA1-PA22. 
  7. Vaidya, S.G. (1976), Peshwa Bajirao II and the Downfall of Maratha Power, Pragati Prakashan, ISBN 978-81-206-1875-6, retrieved 2009-01-14
  8. [1]| Nashik District Gazetteer
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனந்திபாய்&oldid=3451494" இருந்து மீள்விக்கப்பட்டது