உள்ளடக்கத்துக்குச் செல்

ஆணவக் கொலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆணவக் கொலை என்பது ஒரு குடும்பத்தின் உறுப்பினரை அவர் குடும்பத்துக்கு இழிவு கொண்டு வந்தார் என்று கருதி அக்குடும்பத்தின் உறுப்பினர்கள் சிலர் கொலை செய்வதைக் குறிக்கிறது.[1] பொதுவாகப் பெண்களையே இப்படிக் கொல்கின்றனர். காதல்,[2][3][4] மணவிலக்கு, சாதி மறுப்புத் திருமணம்,[5] கள்ள உறவு, கற்பழிக்கப்படல், முறைபிறழ் புணர்ச்சி, நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை மறுத்தல், குடும்பக் கட்டுப்பாடுகளை மீறல் எனப் பல காரணங்களால் கெளரவக் கொலை நடக்கிறது. ஐக்கிய நாடுகள் அவை வெளியிட்ட அறிக்கை ஒன்றின்படி, 5000க்கும் மேற்பட்ட பெண்கள் இவ்வாறு ஆண்டுதோறும் கொல்லப்படுகிறார்கள்.


சாதி ஆணவக் கொலைகள்

[தொகு]

சாதி மற்றும் சமூகக் கட்டுப்பாடுகளை மீறி காதல் அல்லது திருமணம் செய்பவர்களை, தங்கள் குடும்பத்திற்கு அவமானம் என்று கருதி சொந்தக் குடும்பத்தினராலேயே செய்யப்படும் கொலைகள் சாதி ஆணவக் கொலைகள் என்று அழைக்கப்படுகின்றன.

பின்னணி

[தொகு]

சாதிப் படிநிலைகளைத் தக்கவைக்கவும், வெவ்வேறு சாதிகளுக்கு இடையிலான உறவுகளைத் தடுக்கவும் இக்கொலைகள் நடக்கின்றன.

முக்கிய வழக்குகள்

[தொகு]
  • உடுமலை சங்கர் கொலை வழக்கு (2016)
  • கோகுல்ராஜ் கொலை வழக்கு (2015)
  • கண்ணகி - முருகேசன் வழக்கு (2003)
  • திருநெல்வேலி கவின் கொலை வழக்கு (2025)

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆணவக்_கொலை&oldid=4560894" இலிருந்து மீள்விக்கப்பட்டது