அ ஆ இ (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அ ஆ இ நெதர்லாந்திலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்களால் வெளியிடப்பட்ட ஒரு தமிழ் காலாண்டு சிற்றிதழாகும்.[1] புலம்பெயர் தமிழர்கள் தாம் புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழை வளர்க்கவும், தமிழ் மொழியைப் பாதுகாத்துக் கொள்ளவும், தமிழ் கலை, கலாசாரங்களைப் பேணிக் கொள்ளவும் பலவிதமான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இந்த அடிப்படையிலேயே இவ்விதழும் வெளிவந்துள்ளது.

முதல் இதழ்[தொகு]

முதல் இதழ் சுவடு 1, டிசம்பர் 1989ல் வெளிவந்துள்ளது.

பணிக்கூற்று[தொகு]

அரசியல் ஆய்வு இலக்கிய காலாண்டு இதழ்

முகப்பட்டை[தொகு]

சண்முகம் சிவலிங்கத்தின் ‘மீண்டும் எழுந்திருக்கையில்’ என்ற கவிதையில் ஒரு சில வரிகள் முகப்பட்டையில் இடம்பெற்றிருந்தன.

சிறப்பு[தொகு]

கையெழுத்து வடிவில் இதழாக அச்சாகியிருந்தது. இடைக்கிடையே தமிழ் தட்டச்சு எழுத்துக்களும் பயன்படுத்தப்பட்டிருந்தன.

முதல் இதழில் ஆசிரியர் குழுவின் கருத்து[தொகு]

“இது அரசியல் ஆய்வும், இலக்கிய இதழின் முதல் சுவடு. எமது எண்ணம் உணர்வுகளின் ஆரம்பம். கையெழுத்து வடிவில் சஞ்சிகையாக உருப்பெற்றுள்ளது. நிகழ்காலத்தில் நெதர்லாந்திலிருந்து வெளிவரும் தமிழ் பத்திரிகைகளில் ஒன்றாக இது அமைந்துள்ளது”.

உள்ளடக்கம்[தொகு]

கவிதைகள், கவிதை விமர்சனங்கள், அரசியல் ஆய்வுகள், இலக்கிய சந்திப்பு நிகழ்வுகள் ஆகியன முதல் இதழில் இடம்பெற்றிருந்தன. முதல் இதழ் 24 பக்கங்களைக் கொண்டிருந்தது.

பிந்திய இதழ்கள்[தொகு]

கையெழுத்திலும், தட்டச்சிலும் வெளிவந்த இந்த இதழில் பிந்திய இதழ்கள் தமிழ் கணினியில் பதிப்பிக்கப்பட்டு வெளிவந்தன. இலங்கை அரசியல் நிலைகளை இவை அதிகளவில் அலசி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

புத்தகத்தை இணையத்தில் படிக்க[தொகு]

அ.ஆ.இ - நெதர்லாந்து[தொடர்பிழந்த இணைப்பு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "அ.ஆ.இ - நெதர்லாந்து". படிப்பகம். பார்க்கப்பட்ட நாள் 4 மே 2016.[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அ_ஆ_இ_(சிற்றிதழ்)&oldid=3230646" இலிருந்து மீள்விக்கப்பட்டது