அ. ரெங்கசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அ. ரெங்கசாமி (பி: 1930) மலேசிய எழுத்தாளர்களுள் ஒருவராவார். 'கோலலங்காட் ரெங்கசாமி' எனும் புனைப்பெயரால் அறியப்பட்ட இவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரும்கூட. மேலும், இவர் மலேசியாவில் குறிப்பிடத்தக்க நாவலாசிரியர். மற்றும் மலேசியாவில் தமிழர்களின் வரலாற்றைத் தம் நாவல்களில் யதார்த்தம் குலையாமல் சொல்லியிருக்கிறார்.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1950 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், நாவல்கள், மேடை மற்றும் வானொலி நாடகங்கள் ஆகியவற்றை எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

நூல்கள்[தொகு]

  • "காமாட்சி விளக்கு" (சிறுகதைகள்);

நாவல்கள்[தொகு]

பரிசில்களும், விருதுகளும்[தொகு]

  • 2005இல் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், அஸ்ட்ரோ தொலைக்காட்சி, மலேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடத்திய நாவல் போட்டியில் இவரது "லங்காட் நதிக்கரை" நாவல் முதன்மைப் பரிசையும் பி. பி. நாராயணன் விருதையும் வென்றது.
  • "உயிர்பெறும் உண்மைகள்" தமிழ் நேசன் நாவல் போட்டியில் முதல் பரிசு
  • 2005இல் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்க தங்கப் பதக்கம்

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._ரெங்கசாமி&oldid=3230641" இலிருந்து மீள்விக்கப்பட்டது