அ. தி. சரசுவதி
தோற்றம்
அ. தி. சரசுவதி | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1991–1996 | |
| முன்னையவர் | தூ. க. சுப்ரமணியம் |
| பின்னவர் | எஸ். கே. ராஜேந்திரன் |
| தொகுதி | சத்தியமங்கலம் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 8 சனவரி 1957 ஆலத்துக்கோம்பை |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | அஇஅதிமுக |
| தொழில் | விவசாயி |
அ. தி. சரசுவதி (A. T. Saraswathi) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் ஈரோடு மாவட்டம் ஆலத்துக்கோம்பை கிராமத்தினைச் சேர்ந்தவர். எட்டாவது வகுப்பு வரை கல்வி பயின்றுள்ள சரசுவதி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்தவர். இவர், 1991ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் சத்தியமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]