அவிட்டத்தூர்
அவிட்டத்தூர் Avittathur | |
|---|---|
நகரம் | |
| நாடு | |
| State | கேரளம் |
| மாவட்டம் | திருச்சூர் மாவட்டம் |
| மொழிகள் | |
| • உதியோகப்பூர்வமான | மலையாளம், ஆங்கிலம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
| வாகனப் பதிவு | KL- |
அவிட்டத்தூர் (Avittathur) என்பது இந்தியாவில் கேரள மாநிலத்திலுள்ள திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு கிராமம் ஆகும். பண்டைய கேரளத்தில் உள்ள 64 அசல் பிராமணக் குடியேற்றங்களில் இந்தக் கிராமமும் ஒன்றாகும்[1]. இந்த இடம் பழங்காலத்து சிவன் கோவிலான மகாதேவர் கோயிலுக்கு, மிகவும் புகழ் பெற்றதாகும், இந்த மிகவும் பழமையான கோவிலில் நான்கு பழமையான கல்வெட்டுகள் கிடைக்கப் பெற்றுள்ளன[2]. தொன்மக் கதைகளின் படி, இந்தக் கோவிலை அகத்திய முனிவர் தாபித்ததாகவும் மேலும் அக்காலத்தில் இந்த கிராமத்தின் பெயரானது அகஸ்தியப்புத்தூர் என்ற பெயரில் இருந்ததாகவும், மேலும் இது சமசுகிருத மொழியை சார்ந்த திரியலாகும். பழம் பெருமைவாய்ந்த சாக்யார் கூத்து மற்றும் கூடியாட்டத்தின் விற்பன்னர் நாட்டியாச்சாரியார் விதூசகரத்தினம் பத்ம ஸ்ரீ மணி மாதவ சாக்கியார் இந்தக் கோவிலில் பல ஆண்டுகளாக நிகழ்ச்சியில் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொள்கிறார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Graamam No.13 - Avittathoor Graamam". www.namboothiri.com.
- ↑ "A National Monument - Avittathur Mahadeva Temple". www.pilgrimagetemple.wordpress.com.