அழகப்ப செட்டியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
Appearance
![]() | |
வகை | அண்ணா பல்கலைக்கழகத்தின் ஒருங்கிணைந்த கல்லூரி |
---|---|
உருவாக்கம் | 1952 |
அமைவிடம் | , , |
இணையதளம் | http://www.accet.net |
அழகப்ப செட்டியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி (Alagappa Chettiar College of Engineering and Technology) தமிழ்நாடு காரைக்குடியில் அமைந்துள்ளது. காரைக்குடியைச் சேர்ந்த முனைவர் ஆர்.எம்.அழகப்ப செட்டியார் உருவாக்கிய பல கல்வி நிறுவனங்களில் இதுவும் ஒன்று.[1][2]
வரலாற்றுக் காலக்கோடு
[தொகு]- கல்லூரியின் பிரதான கட்டிடத்தை அன்றைய குடியரசுத்தலைவர் முனைவர் இராசேந்திர பிரசாத் 1953-ஆம் ஆண்டு பிப்ரவரி 19 அன்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
- 1969-ஆம் ஆண்டு இலத்திரனியல் மற்றும் தொலைத்தொடர்பு பொறியியல் (Electronics and Communication Engineering) துறைக்கான புலம் (faculty) தொடங்கப்பட்டது.
- 1983-ஆம் ஆண்டு நுண்ணலை மற்றும் ஒளியியல் பொறியியல் (Microwave and Optical Engineering) பட்டமேற்படிப்பு (M.E) தொடங்கப்பட்டது.
- 1988-ஆம் ஆண்டு கணிப்பொறி பயன்பாட்டியல் (Computer Application) பட்டமேற்படிப்பு (MCA) தொடங்கப்பட்டது.
- 2001-ஆம் ஆண்டு கணிப்பொறி அறிவியல் பொறியியல் படிப்பு (B.E Computer Science) தொடங்கப்பட்டது.
- 2001, டிசம்பர் 31 இல் அண்ணா பல்கலைக்கழகத்தின் ஒன்றிணைந்த கல்லூரியாக ஆக்கப்பட்டது.
- 2007-2008- ஆம் கல்வியாண்டு முதல் திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தின் ஒன்றிணைந்த கல்லூரியாக ஆக்கப்பட்டது.
- 2008-2009-ஆம் கல்வியாண்டு முதல் தன்னாட்சி கல்லூரியாக செயல்பட்டு வருகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "About ACGCET" (PDF). Anna University, Chennai. Retrieved 2 February 2016.
- ↑ The Hindu : Tamil Nadu News : Chief Minister to present best colleges awards