அலனா கோல்மி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அலனா கோல்மி (Alana Golmei) இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு மனிதநேய ஆர்வலராவார். செயற்பாட்டாளராகவும் வழக்கறிஞராகவும் உள்ள இவர் பன்னு அறக்கட்டளையின் நிறுவனருமாவார்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பாலின அடிப்படையிலான பாகுபாடுகள், உடல் மற்றும் மன இடர்பாடுகளை களைந்து பெண்களின் கவுரவத்தைப் பாதுகாப்பதை இந்த அறக்கட்டளை தனது நோக்கமாக உறுதிபூண்டுள்ளது, மேலும் சாதி, வர்க்கம், இனம், மதம் மற்றும் புவியியல் பகுதி ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான பாகுபாடுகள் மற்றும் குற்றங்களுக்கு எதிராக பன்னு அறக்கட்டளை பாடுபடுகிறது.

தில்லி பர்மா மையத்தின் நிறுவன உறுப்பினராகச் செயல்படும் அலனா 2007 ஆம் ஆண்டில் வடகிழக்கு ஆதரவு மையம் & உதவி மையத்தைத் தொடங்கினார். [1][2][3] பெண்கள், வடகிழக்கு மக்கள், தில்லியில் உள்ள பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு தேசிய தலைநகர் பிராந்தியத்தில் துன்புறுத்தல்கள் மற்றும் இடர்பாடுகளைத் தடுப்பதை இம்மையம் நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது. [4][5][6]

வடகிழக்கு இந்தியாவைச் சேர்ந்த மக்கள் தில்லியில் எதிர்கொள்ளும் பெரும் பிரச்சினைகளைக் கையாள்வதில் அலனா கோல்மி முன்னணியில் இருந்தார்.

கோல்மிக்கு 2016 ஆம் ஆண்டு மகளிர் தினமான மார்ச்சு மாதம் 8 ஆம் தேதியன்று தில்லி சாதனை மகளிர் விருது வழங்கப்பட்டது. [5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "'He Spat and Called Me Corona': Racism Against North East Indians Feeds Off Coronavirus Panic". news 18. பார்க்கப்பட்ட நாள் 17 May 2020.
  2. "'Beaten, abused, spat on': People from Northeast endure racist slurs amid coronavirus panic". The Print. பார்க்கப்பட்ட நாள் 17 May 2020.
  3. "'Coronavirus' Is Now A Racial Slur In India: What Can Govt Do To Prevent Attacks?". Huffington post. பார்க்கப்பட்ட நாள் 17 May 2020.
  4. "Alana Golmei and her helpline to fight discrimination against people from the Northeast".
  5. 5.0 5.1 "Dr. Alana Golmei awarded 'DCW Achievement Award' 2016".
  6. "TEDxIITGuwahati speakers".

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலனா_கோல்மி&oldid=3208749" இலிருந்து மீள்விக்கப்பட்டது