அரு. இலட்சுமணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரு. இலட்சுமணன்
A. R. Lakshmanan
இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி
பதவியில்
20 திசம்பர் 2002 – 22 மார்ச் 2007
தலைவர், 18-வது இந்திய சட்ட ஆணையம்
பதவியில்
2006–2009
தனிநபர் தகவல்
பிறப்பு (1942-03-22)22 மார்ச்சு 1942
இந்தியா
இறப்பு ஆகத்து 26, 2020(2020-08-26) (அகவை 78)
இறப்பிற்கான
காரணம்
இதய நிறுத்தம்
அடக்க இடம் தேவகோட்டை

அருணாச்சலம் இலட்சுமணன் (Arunachalam Lakshmanan, சுருக்கமாக A. R. Lakshmanan, 22 மார்ச்சு 1942 - 27 ஆகத்து 2020) இந்திய உச்ச நீதிமன்ற ஒய்வு பெற்ற நீதிபதி ஆவார். 2006 முதல் 2009 வரை இந்திய சட்டக் குழுவின் தலைவராக இருந்தார்.

தேவகோட்டையைச் சேர்ந்த இலட்சுமணன் சென்னையில் கல்வி பயின்றார். 1968 ஆம் ஆண்டில் வழக்குரைஞராகப் பதிவானார். அரசுத் தரப்பு வழக்குரைஞராகவும், பல வங்கிகளில் சட்ட ஆலோசகராகவும் பதவி வகித்தார். பிற்படுத்தப் பட்ட வகுப்பைச் சேர்ந்த சட்டம் பயிலும் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்க தமிழ் நாடு அரசு இலக்சுமணனை அமர்த்தியது. சென்னை உயர்நீதி மன்றத்திலும், கேரளா உயர்நீதி மன்றத்திலும் நீதிபதியாகவும் பின்னர் இராசஸ்தான் உயர்நீதி மன்றத்தில் முதன்மை நீதிபதியாகவும் அமர்த்தப் பட்டார். ஆந்திர உயர்நீதிமன்றத்திலும் முதன்மை நீதிபதியாக இருந்தார். 2002 திசம்பர் அன்று இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதியாக அமர்த்தப் பட்டார். 2007 மார்ச்சு மாதம் ஒய்வு பெற்றார். உச்ச நீதிமன்றம் இவரை முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழ் நாடு அரசின் பிரதிநிதியாக அமர்த்தியது.

உசாத்துணைகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரு._இலட்சுமணன்&oldid=3027026" இருந்து மீள்விக்கப்பட்டது