அரசு கலை அறிவியல் கல்லூரி, பொள்ளாச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரசு கலை அறிவியல் கல்லூரி, பொள்ளாச்சி
வகைஅரசினர் கலைக்கல்லூரி
உருவாக்கம்2017
சார்புபாரதியார் பல்கலைக்கழகம்
தலைவர்தமிழ்நாடு அரசு
மாணவர்கள்895
அமைவிடம், ,

பொள்ளாச்சி அரசு கலை அறிவியல் கல்லூரி (Government Arts and Science College, Pollachi) என்பது தென்னிந்தியாவில், தமிழ்நாட்டின், கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சியில் தமிழக அரசால் நடத்தப்படும் ஒரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியாகும். இக்கல்லூரி 2017 ஆண்டு தமிழக அரசால் துவக்கப்பட்டது. இது கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி ஆகும்.[1] இக்கலூரி பொள்ளாச்சியில் சமத்தூர் ராம ஐயங்கார் நகராட்சி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தற்காலிகமாக துவக்கப்பட்டு செயல்பட்டுவந்தது. அதே வளாகத்தில் கல்லூரிக்கு நான்கு ஏக்கர் நிலம் ஒதுக்கபட்டு கட்டடங்கள் கட்ட 2019 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது.[2]

பாடப்பிரிவுகள்[தொகு]

இளங்கலை[தொகு]

  • இளங்கலை ஆங்கிலம்
  • இளம் அறிவியல் கணிதம்
  • இளநிலை வணிகவியல் கணினி பயன்பாடு
  • இளநிலை வணிகவியல்
  • இளநிலை வணிக நிர்வாகம்

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Admin (2021-07-27). "அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பொள்ளாச்சி". rasivalai.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-07-11.
  2. தினத்தந்தி (2021-10-27). "பொள்ளாச்சி அரசு கலைக்கல்லூரி புதிய கட்டிடம் திறப்பது எப்போது கூடுதல் பாடப்பிரிவுகளை தொடங்க வலியுறுத்தல்". www.dailythanthi.com. பார்க்கப்பட்ட நாள் 2022-07-11.

வெளியிணைப்புகள்[தொகு]