அரசினர் கலைக் கல்லூரி, திருவாடானை
வகை | அரசினர் கலைக்கல்லூரி |
---|---|
உருவாக்கம் | 2013 |
சார்பு | அழகப்பா பல்கலைக்கழகம் |
அமைவிடம் | , , |
அரசினர் கலைக்கல்லூரி, திருவாடானை இந்தியாவின் தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் செயற்பட்டுவரும் இருபாலாருக்கான தமிழக அரசின் கலைக் கல்லூரியாகும். 2013ஆம் ஆண்டில் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட ஆறு கலைக்கல்லூரிகளில் இதுவும் ஒன்றாகும். அரசினர் கலைக் கல்லூரி, உத்திரமேரூர், அரசினர் கலைக் கல்லூரி, கடலாடி, அரசினர் கலைக் கல்லூரி, சிவகாசி, அரசினர் கலைக் கல்லூரி, கோவில்பட்டி, அரசினர் கலைக் கல்லூரி, கறம்பக்குடி ஆகியவை இதர ஐந்து கல்லூரிகளாகும்.[1]
அமைவிடம்[தொகு]
இக்கல்லூரி தற்போது தற்காலிகமாக, திருவாடானை அரசினர் மேல்நிலைப்பள்ளியில் செயற்பட்டு வருகிறது.
இதனையும் காண்க[தொகு]
- தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் பட்டியல்
- இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள்