அரசினர் ஆடவர் கலைக் கல்லூரி, கிருட்டிணகிரி
| குறிக்கோளுரை | யாதும் ஊரே யாவரும் கேளிர் |
|---|---|
| வகை | பொது |
| உருவாக்கம் | 1964 |
| சார்பு | பெரியார் பல்கலைக்கழகம் |
| முதல்வர் | பி. இரவிக்குமார் |
| அமைவிடம் | , , 12°31′59″N 78°14′52″E / 12.533123°N 78.247645°E |
| வளாகம் | நகரம் |
| இணையதளம் | http://www.gacmenkrishnagiri.org |
அரசினர் ஆண்கள் கலைக் கல்லூரி, கிருட்டிணகிரி, என்பது தமிழ்நாட்டின் கிருட்டிணகிரியில் அமைந்துள்ள ஒரு கலை அறிவியல் கல்லூரி ஆகும். இது 1964 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இக்கல்லூரி பெரியார் பல்கலைக்கழ இணைவுக் கல்லூரியாகும். [1] இந்த கல்லூரியில் கலை, வணிகவியல் மற்றும் அறிவியல் ஆகிய துறைகளில் பல்வேறு படிப்புகளை வழங்கப்படுகிறது. தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையின் (NAAC) B++ தரத்துடன் செயற்பட்டு வருகிறது. பேராசிரியர் பி. இரவிக்குமார் இக்கல்லூரியின் முதல்வராக உள்ளார். 50,000-க்கும் மேற்பட்ட நூல்களைக் கொண்ட நூலகம் ஒன்றும் உள்ளது.[2]
கல்லூரி வரலாறு
[தொகு]கிருஷ்ணகிரி அரசு கலைக்கல்லூரி 1964-ம் ஆண்டில் தொடங்கப்பெற்றது. தமிழ்நாட்டில் கல்வியில் பின்தங்கிய இப்பகுதியில், உயர்கல்வி பயில ஒரு கல்லூரி தொடங்க வேண்டுமென்ற ஆர்வமும், அதற்காக பொதுமக்கள் வழங்கிய நன்கொடையும், தமிழக அரசு இக்கலைக் கல்லூரியை தொடங்க காரணமாக இருந்தன. 15.10.1964-ல் மாண்புமிகு முதலமைச்சர் எம்.பக்தவத்சலம் அவர்களால் இக்கல்லூரி தொடங்கப்பட்டது.
1982-83 ஆம் ஆண்டு முதல் இக்கல்லூரி ஆய்வு நிறுவனமாக சென்னைப் பல்கலைக் கழகத்தினரால் அறிந்தேற்பு செய்யப்பட்டது.
துறைகள்
[தொகு]அறிவியல்
[தொகு]- இயற்பியல்
- வேதியியல்
- கணிதம்
- தாவரவியல்
- விலங்கியல்
- நுண்ணுயிரியல்
- கணினி அறிவியல்
கலை மற்றும் வணிகம்
[தொகு]- தமிழ்
- ஆங்கிலம்
- உருது
- வரலாறு
- பொருளியல்
- வணிக நிர்வாகம்
- வணிகவியல்
அங்கீகாரம்
[தொகு]கல்லூரியானது பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Affiliated College of Periyar University". Archived from the original on 2017-09-20. Retrieved 2019-07-25.
{{cite web}}: Cite has empty unknown parameter:|3=(help) - ↑ "Library". Archived from the original on 28 மே 2020. Retrieved 4 May 2020.
வெளி இணைப்புகள்
[தொகு]- "Government Arts College, Krishagiri". gacmenkrishnagiri.org. Retrieved 2017-09-24.