அம்பை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சி. எஸ். லட்சுமி
பிறப்பு1944
கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா
புனைபெயர்அம்பை
தொழில்எழுத்தாளர், ஆய்வாளர்-பெண்களின் கல்வி
மொழிதமிழ், ஆங்கிலம், இந்தி, கன்னடம்
தேசியம்இந்தியர்
கல்விமுனைவர்
கல்வி நிலையம்ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், புது தில்லி
காலம்1962 – தற்போது வரை
வகைசிறுகதை, புதினம், குறுநாவல்
கருப்பொருள்பெண்கள், பெண்ணியம்
குறிப்பிடத்தக்க படைப்புகள்சிறகுகள் முறியும்
வீட்டின் மூலையில் ஒரு சமயலறை
காட்டில் ஒரு மான்
குறிப்பிடத்தக்க விருதுகள்சாகித்திய அகாதமி விருது (2021)
துணைவர்விஷ்ணு மாத்தூர்

அம்பை (Ambai) என்கிற சி. எஸ். லட்சுமி (C. S. Lakshmi, பிறப்பு:1944) தமிழின் சிறந்த பெண் படைப்பாளிகளுள் ஒருவர். 1960களின் பிற்பகுதியில் எழுதத் ​தொடங்கியவர். ​பெண் நிலை நோக்கினை வெளிப்படுத்தும் வகைமையிலான தமிழ்ச் சிறுகதைகளின் முன்னோடி. பல பெண் படைப்பாளிகள் தொடச் சிரமப்படும் விடயங்களை சர்வ சாதாரணமாக தொட்டுச் சென்றவர். உறவு, காதல், திருமணம், அரசியல், இசை என்று பல்வேறு பரிமாணங்களைத் தொட்டவர். பெண்களின் வாழ்க்கையை அதுவும் சுயசிந்தனை கொண்ட படித்த பெண்களை மிக இயல்பாக படைத்தவர். தமிழகத்தின் எல்லை கடந்த நிலப்பகுதிகளையும் களனாகக் கொண்ட இவரது கதைகளில் ​பெண்களின் உறவுச் சிக்கல்கள், பிரச்சனைகள், குழப்பங்கள், கோபதாபங்கள், சமரசங்கள் யாவும் கிண்டலான தொனியில் கலாபூர்வமாக வெளிப்படுகின்றன.

இவர் ”SPARROW” (Sound and Picture Archives for Research on Women) என்ற அமைப்பை நிறுவி அதன் இயக்குநராக செயல்பட்டு வருகிறார். டாக்டர் சி. எஸ். லட்சுமி என்ற தன்னுடைய இயற்பெயரில் தி இந்து, தி எக்னாமிக்ஸ் அண்ட் பொலிடிக்கல் வீக்லி, தி டைம்ஸ் ஆஃப் இந்தியா போன்ற ஆங்கிலப் பத்திரிகைகளுக்கு அவ்வப்போது எழுதி வருகிறார். இவர் எழுதிய "சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சை பறவை" என்ற சிறுகதை நூலுக்கு 2021 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது அறிவிக்கப்பட்டது.[1][2]

வாழ்க்கை வரலாறு[தொகு]

1944 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் இவர் பிறந்தார். 1976இல் விஷ்ணு என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.[3][4][5]. திருமணத்திற்குப் பின்னர் கணவருடன் செய்துகொண்ட ஒப்பந்தப்படி குழந்தை பெற்றுக்கொள்வதில்லை என முடிவு செய்தார். பொருளாதாரக் காரணங்கள் மட்டுமின்றி படைப்பு, மற்றும் தான் தேர்ந்தெடுத்த சமூகப் பணிகளுக்குக் குழந்தைகளை உள்ளடக்கிய குடும்ப அமைப்பு தடையாக இருக்கும் என்பது இவரது கருத்தாக இருந்தது. வரலாற்றில் முதுகலை பட்டமும் அமெரிக்கக் கல்வியில் முனைவர் பட்டமும் பெற்றவர். தமிழ், ஆங்கிலம், இந்தி மற்றும் கன்னடத்தில் புலமை பெற்றவர். ‘தங்கராஜ் எங்கே’ என்ற சிறுவர் திரைப்படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். ‘முதல் அத்தியாயம்’ என்ற சிறுகதையைத் திரைப்படமாகத் தயாரித்துள்ளார்.

வெளிவந்த நூல்கள்[தொகு]

  • அந்தி மாலை (புதினம்)
  • ஒரு கறுப்புச் சிலந்தியுடன் (1988)
  • அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு (2014)
  • சிறகுகள் முறியும் (1976) - (முதலாவது தொகுதி - ஓர் பெண்ணின் வாழ்வில் ஏற்படும் பலவிதமான சம்பவங்களை சம்பிரதாயங்களை பேசும் கதைகள்)
  • வீட்டின் மூலையில் ஓர் சமையல் அறை (1988)
  • காட்டில் ஒரு மான் (2000)
  • சக்கர நாற்காலி
  • ஸஞ்சாரி
  • தண்ணியடிக்க
  • வற்றும் ஏரியின் மீன்கள் (2007)
  • பயணப்படாத பாதைகள் (ஓவியம், நாடகம், பாரம்பரிய நடனத்துறைகளில் ஈடுபட்ட பெண்களின் வாய்மொழி வரலாற்றுப்பதிவு)
  • சொல்லாத கதைகள் (சுதந்திரப் போராட்டத்தில் பங்குபற்றிய பெண்கள், தலித்எழுத்தாளர்கள் ஆகியவர்களின் வாய்மொழி வரலாற்றுப்பதிவு)

ஆங்கில மொழிபெயர்ப்பில்[தொகு]

  • A Purple Sea (1992),
  • In a Forest
  • A Deer (2006)
  • The Face Behind the Mask of Women in Tamil literature and Society and Women Writers (1984) - (ஆராய்ச்சி நூல்)
  • Fragrance of Peace (இரோம் சர்மிளா)- தமிழில் "அமைதியின் நறுமணம்" (2010)

சாகித்திய அகாதமி விருது[தொகு]

1960-ஆண்டிலிருந்து எழுதி வரும் அம்பையின் “சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சை பறவை” என்ற சிறுகதை நூலுக்கு 2021-ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.2019 ஆண்டு வெளிவந்த இந்நூல் 244 பக்கங்களையும் 13 சிறுகதைகளையும் கொண்டுள்ளது.சாகித்திய அகாதமி விருதுடன் ரூபாய் 1 இலட்சம் மதிப்புள்ள காசோலை வழங்கப்பட்டது. [6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sahitya Akademi Award". ஏபிபி செய்தி. https://tamil.abplive.com/news/tamil-nadu/sahitya-akademi-award-for-writer-ambai-c-s-lakshmi-32960. பார்த்த நாள்: 30 December 2021. 
  2. பிரசாத், சு அருண். "சாகித்திய அகாதமி விருது பெறும் தமிழின் 4-வது பெண் எழுத்தாளர் அம்பை பற்றிய சில குறிப்புகள்!". www.vikatan.com/. பார்க்கப்பட்ட நாள் 2021-12-30.
  3. Aditi De (2005-05-06). "The little bird's long journey". தி இந்து (தி இந்து குழுமம்) இம் மூலத்தில் இருந்து 2005-05-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20050506023923/http://www.hindu.com/fr/2005/05/06/stories/2005050603560300.htm. பார்த்த நாள்: 2009-12-11. 
  4. Tharu, Susie J.; Lalitha, Ke. (1993). Women Writing in India: The twentieth century. Feminist Press. பக். 487–8. ISBN 1-55861-029-4, ISBN 978-1-55861-029-3. http://books.google.com/books?id=OjZYf9Xf9bcC&pg=PA488. 
  5. Miller, Jane Eldridge (2001). Who's who in contemporary women's writing. Routledge. பக். 13. ISBN 0-415-15980-6, ISBN 978-0-415-15980-7. http://books.google.com/books?id=Y-TMhtk5AUYC&pg=PA13. 
  6. எழுத்தாளர் அம்பைக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்பை&oldid=3841123" இலிருந்து மீள்விக்கப்பட்டது