அப்பரசம்பேட்டை ஆபத்சகாயேசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அப்பரசம்பேட்டை ஆபத்சகாயேசுவரர் கோயில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.

அமைவிடம்[தொகு]

இக்கோயில் திருவாரூர் மாவட்டத்தில் குடவாசல் வட்டத்தில் விடையபுரம் என்னுமிடத்தில் அமைந்துள்ளது.[1]

இறைவன், இறைவி[தொகு]

இக்கோயிலின் மூலவராக ஆபத்சகாயேசுவரர் உள்ளார். இங்குள்ள இறைவி அகிலாண்டேசுவரி ஆவார். [1]

அமைப்பு[தொகு]

இக்கோயிலின் மூலவருக்குத் தலையில் வெட்டியது போல வடு அமைந்துள்ளது சிறப்பாகும். இறைவி அபய முத்திரையுடன் காணப்படுகிறார். அம்மன் சன்னதி அருகில் கால பைரவர் காணப்படுகிறார். சண்டிகேசுவரர், தட்சிணாமூர்த்தி ஆகியோர் இங்கு உள்ளனர்.[1]

திருவிழாக்கள்[தொகு]

பௌர்ணமி, பிரதோஷம், சிவராத்திரி போன்ற விழாக்கள் இக்கோயிலில் கொண்டாடப்படுகின்றன. [1]

மேற்கோள்கள்[தொகு]