அப்துல் ரகுமான் இப்னு அவ்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அப்துல் ரஹ்மான் இப்னு அவ்ஃப் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அப்துல் ரஹ்மான் இப்னு அவ்ஃப்
அப்துல் ரஹ்மான் இப்னு அவ்ஃப் பெயர் இசுலாமியக் கையெழுத்து முறையில்
நபித்தோழர்
பிறப்புபொது ஆண்டு ;581
மக்கா
இறப்பு
654 (வயது73)
ஜோர்தான்
ஏற்கும் சபை/சமயங்கள்இஸ்லாம்
செல்வாக்கு செலுத்தியோர்முஹம்மது நபி

அப்துல் ரகுமான் இப்னு அவ்பு (Abd al-Rahman ibn 'Awf, அப்து அல்-ரஹ்மான் இப்னு 'அவ்ஃப், கிபி 581 - 654)[1] :94,103 [2] இறைத்தூதர் முகம்மது நபியின் தோழர்களில் ஒருவராகவும் சொர்க்கத்தில் நுழைய வாக்குறுதியளிக்கப்பட்ட பத்து நபித்தோழர்களில் ஒருவராக அறியப்படுகிறார்.

பின்னணி[தொகு]

இவரது பெற்றோர் இருவரும் மக்காவில் உள்ள குறைசி பழங்குடி குலத்தைச் சேர்ந்தவர்கள். இவரது தந்தை 'அவ்ஃப் இப்னு' அப்த் -அவ்ஃப் மற்றும் அவரது தாயார் அல்-ஷிஃபா பின்த் 'ஆவ்ஃப் ஆவார்.[1] :94

இயற்பெயர் அப்து அம்ர் என்பதாகும். இஸ்லாத்தை ஏற்ற பின்னர் முஹம்மது நபி தான் அவரை 'அப்துல் ரஹ்மான்' ("மிக்க கருணையாளரின் வேலைக்காரன்") என்று பெயர் மாற்றினார். [1] :94 அவரது அசல் பெயர் அப்துல் காபா என்றும் கூறப்படுகிறது. :94–95

இஸ்லாத்திற்கு திரும்புதல்[தொகு]

முஹம்மது நபி(ஸல்) அவர்களின் தோழரான அபுபக்கர் அவர்கள் இஸ்லாம் பற்றி 'அப்துல் ரஹ்மானுடன் பேசினார், பின்னர் இறைத்தூதரை சந்திக்க அழைத்தார், பின்னர் அல்லாஹ்வின் மீதும் தூதரின் மீதும் நம்பிக்கை கொண்டு இஸ்லாம் மதத்தில் இணைந்தார் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட முதல் எட்டு பேரில் அப்துல் ரஹ்மான் அவர்களும் ஒருவர். [3] :115–116 [4]

ஆட்சியாளரை தேர்ந்தெடுத்ததில் பங்கு[தொகு]

ஆகஸ்ட் 634 இல், முதல் இஸ்லாமிய ஆட்சியாளரான அபுபக்கர் அவர்கள் இறக்கும் தருவாயில் அடுத்த ஆட்சியளர் பற்றி 'அப்துல்-ரஹ்மான் மற்றும் உத்மானை ஆகியோரிடம் உமர் இப்னு கத்தாப் அவர்களை வாரிசாக நியமித்ததாக அவர்களுக்குத் தெரிவித்தார்.   [ மேற்கோள் தேவை ] 644 ஆம் ஆண்டில், இரண்டாம் ஆட்சியாளரான உமர் இறக்கும் தருவாயில் ஆறு உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவை (ஷூரா கவுன்சில்) தங்களில் ஒருவரை அடுத்த ஆட்சியாளராக தேர்வு செய்ய பரிந்துரைத்தார் . இந்த குழுவில் சாத் இப்னு அபி வகாஸ், அப்துல்-ரஹ்மான் இப்னு அவ்ஃப், ஜுபைர் இப்னுல் அவாம், தல்ஹா இப்னு உபைத் அல்லாஹ், அலி இப்னு அபி தலிப் மற்றும் உத்மான் இப்னு அஃபான் ஆகியோர் இருந்தனர். இதில் உத்மானை மூன்றாவது கலீபாவாக 'அப்துல்-ரஹ்மான் இப்னு' அவ்ஃப் தேர்ந்தெடுத்தார். [5]

தாராள மனப்பான்மை[தொகு]

'அப்துல் ரஹ்மான் அக்கால கட்டத்தில் செல்வந்தராகவும் தனிப்பட்ட தாராள மனப்பான்மை கொண்டவராகவும் இருந்தார். ஒருமுறை ஆயிஷா குறிப்பிட்டார், "அல்லாஹ்வின் தூதர் சொல்வதை நான் கேட்டுள்ளேன்: 'அப்துல் ரஹ்மான் இப்னு அவ்ஃப் சொர்க்கத்தில் ஊர்ந்து செல்வதை நான் கண்டிருக்கிறேன்." இது 'அப்துல்-ரஹ்மானிடம் மீண்டும் மீண்டும் கூறப்பட்டது: அவர் பதிலளித்தார்: "என்னால் முடிந்தால், நான் நிச்சயமாக சொர்க்கத்தில் நிற்க விரும்புகிறேன். யா அம்மா, இந்த முழு ஒட்டக கூண்டில்கள் அதில் உள்ள அனைத்து பொருட்களையும் கொண்டு, நான் தர்மமாக தருவேன் என்று சத்தியம் செய்கிறேன்.பின்னர் அவ்வாரே செய்தார். [6]

இறப்பு[தொகு]

அப்துல் ரஹ்மான் இப்னு அவ்ஃப் லேவண்ட்ல் 75 வயதில் (653-654 கிபி) அன்று இறப்பெய்தினார் [1] :103 இன்றைய ஜோர்டானின் அம்மான் நகரின்வடகிழக்கில் ஒரு மலையில் அவர் உடல் அடக்கம் செய்யப்பட்டது. [7]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 Muhammad ibn Saad. Kitab al-Tabaqat al-Kabir Volume 3. Translated by Bewley, A. (2013). The Companions of Badr. London: Ta-Ha Publishers.
  2. "Abdul-Rahman Ibn Awf (580Ad-32Hijri/652Ad) A study in his Religions, Economic and Political Role in the State of Islam During its Emergence and Formation". An-Najah Scholars (in English). An-Najah National University. 2014. Archived from the original on 25 June 2016. பார்க்கப்பட்ட நாள் 22 May 2016.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  3. Muhammad ibn Ishaq. Sirat Rasul Allah. Translated by Guillaume, A. (1955). The Life of Muhammad. Oxford: Oxford University Press.
  4. Note that the expression "the first eight men" does not include a few female converts whose profession of faith may have been earlier.
  5. "Family and Women Affairs". Archived from the original on 2014-01-09. பார்க்கப்பட்ட நாள் 2013-09-08.
  6. Abdur-Rahman Ibn Awf, The Richest Muslim Who Bought His Way to Jannah பரணிடப்பட்டது 2015-12-11 at the வந்தவழி இயந்திரம்
  7. Malhas Tours பரணிடப்பட்டது 2014-12-19 at the வந்தவழி இயந்திரம்

வெளி இணைப்புகள்[தொகு]