அப்துல் கரீம் கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அப்துல் கரீம் கான்
பின்னணித் தகவல்கள்
பிறப்பு11 நவம்பர் 1872
பிறப்பிடம்கைரானா, உத்தரப் பிரதேசம்
இறப்பு27 அக்டோபர் 1937(1937-10-27) (அகவை 64)
இசை வடிவங்கள்இந்திய பாரம்பரிய இசை
தொழில்(கள்)இந்துஸ்தானி இசைப் பாடகர்
இசைத்துறையில்1893–1937

உஸ்தாத் அப்துல் கரீம் கான் (Abdul Karim Khan) (11 நவம்பர் 1872 - 27 அக்டோபர் 1937) [1][2] இவர் ஓர் இந்தியப் பாரம்பரிய இசைப் பாடகரும், தனது உறவினரான அப்துல் வாகித் கானுடன் கிரானா கரானாவின் (பாடும் பாணி) நிறுவனருமாவார்.

ஆரம்பகால வாழ்க்கையும் பின்னணியும்[தொகு]

அப்துல் கரீம் கான் 1872 நவம்பர் 11 ஆம் தேதி உத்தரபிரதேசத்தின் சஹரன்பூரில் உள்ள கைரானா நகரில் இசை பாரம்பரியம் கொண்ட ஒரு குடும்பத்தில் பிறந்தார். இந்த ஊர் இசைக்கலைஞர்கள் குலாம் அலி மற்றும் குலாம் மௌலா ஆகியோருக்கு வேர்களைக் கண்டறிந்தது. இவரது தந்தை காலே கான், குலாம் அலியின் பேரன். அப்துல் கரீம் கான் தனது மாமா அப்துல்லா கான் மற்றும் தந்தை காலே கான் ஆகியோரிடமிருந்து பயிற்சி பெற்றார். இவர் மற்றொரு மாமா, நான்ஹே கானிடமிருந்து வழிகாட்டுதலையும் பெற்றார். குவாலியர் கரானாவின் உஸ்தாத் ரஹ்மத் கானால் இவர் இசை ரீதியாக செல்வாக்கு பெற்றார். குரல் மற்றும் சாரங்கி தவிர, வீணை, சித்தார், கைம்முரசு இணையையும் கற்றுக்கொண்டார்.[1][3]

ஒரு கதையின்படி, இவர் ஆரம்பத்தில் சாரங்கி இசைக்கலைஞராக இருந்தார். ஆனால் சாரங்கி கலைஞர்களின் வாழ்க்கை நிலை குறைவாக இருந்ததால் குரலிசைக்கு மாற முடிவு செய்தார். தனது ஆரம்ப ஆண்டுகளில், இவர் தனது சகோதரர் அப்துல் ஹக் உடன் பாடினார். பின்னர், பரோடா மாநில மன்னர் இந்த பாடும் இரட்டையர்களால் ஈர்க்கப்பட்டு இவர்களை தனது அரசவை இசைக்கலைஞர்களாக மாற்றினார்.

சொந்த வாழ்க்கை[தொகு]

அரச குடும்பத்தைச் சேர்ந்த சர்தார் மாருதி ராவ் மானேவின் மகளான தாராபாய் மானேவை இவர் சந்தித்தார். இவர்கள் திருமணம் செய்ய முடிவு செய்தபோது, பரோடாவிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இந்த இணை மும்பையில் குடியேறியது. 1922 ஆம் ஆண்டில், தாராபாய் மானே அப்துல் கரீம் கானை விட்டு வெளியேறினார். இது இவரது இசையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது - இது இவருக்குள் தீவிரமான மற்றும் தியானத்தை ஏற்படுத்தியது .

இவருக்கு கபூரன் என்ற முதல் மனைவியும் இருந்தார். அவர் மற்றொரு கிரானா மேதையான் அப்துல் வாகித் கானின் சகோதரியாவார்.[2]

தொழில்[தொகு]

தனது சீடர் சவாய் கந்தர்வனுடன் அப்துல் கரீம் கான்

இவர் மைசூர் அரசவைக்கு அழைக்கப்பட்டார். அங்கு இவர் பிரபலமான கருநாடக இசை நிபுணர்ர்களை சந்தித்தார். அவர்களின் இசையால் ஈர்க்கப்பட்டார். குறிப்பாக இவரது சர்கம் பாடுவது கருநாடக நடைமுறையின் நேரடி செல்வாக்கு. மைசூர் அரண்மனை இவருக்கு "இசை ரத்னா" என்ற பட்டத்தை வழங்கியது. மைசூர் செல்லும் வழியில் அவர் தார்வாட்டில் தனது சகோதரருடன் தங்கியிருந்தார். அங்கு இவர் தனது மிகவும் பிரபலமான சீடர் சவாய் காந்தர்வனுக்குக் கற்பித்தார். 1900 ஆம் ஆண்டில், எட்டு மாதங்களுக்கு இவர் கேசர்பாய் கெர்கருக்குக் கற்றுக் கொடுத்தார். இசை மாணவர்களுக்கு கற்பிப்பதற்காக 1913 ஆம் ஆண்டில் புனேவில் ஆரிய சங்கீத வித்யாலயாவை நிறுவினார்.[3]

1937 ஆம் ஆண்டில் தெற்கில் ஒரு கச்சேரி சுற்றுப்பயணத்திலிருந்து திரும்பியபோது தான் இறக்கும் வரை மகாராட்டிராவின் மீரஜ்ஜில் குடியேறினார். ஒவ்வொரு ஆண்டும் ஆகத்து மாதத்தில் இவரது நினைவாக மிராஜில் நினைவு இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இவர் தனது குரல் பாணியில் கொண்டு வந்த புதுமைகள் கிராணா பாணியை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்துகின்றன. கர்நாடக முறையை தீவிரமாக ஆய்வு செய்த முதல் இந்துஸ்தானி இசைக்கலைஞரும் இவர்தான். தென்னிந்தியா முழுவதும் பாட அழைக்கப்பட்ட முதல் நபரும் இவர்தான்.[4] இவர் ஒரு தியாகராஜ கிருதியைக் கூட பதிவு செய்துள்ளார். குவாலியர் கரானாவின் ரஹ்மத் கானால் இவர் ஈர்க்கப்பட்டார்.[1][5] இவர் பல இசைக்கருவிகள், குறிப்பாக வீணை மற்றும் சாரங்கி ஆகியவற்றில் நிபுணராக இருந்தார். இசைக்கருவிகள் பழுதுபார்ப்பதில் நிபுணரான இவர், எல்லா இடங்களிலும் பழுதுபார்ப்பதற்கான தனது கருவிகளை தன்னுடன் எடுத்துச் சென்றார். . . "

சீடர்கள்[தொகு]

இவரது சீடர்களில் இராமச்சந்திர குந்த்கோல்கர் (சவாய் கந்தர்வன்), கணபதி ராவ் கௌரவ், சுரேஷ்பாபு மானே, ரோசன் ஆரா பேகம், விசுவநாத் ஜாதவ் ஆகியோர் அடங்குவர்.[6]

இறப்பு[தொகு]

புதுச்சேரிக்குச் சென்று கொண்டிருந்த இவருக்கு, நெஞ்சு வலி ஏற்பட்டது. 1937ஆம் ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி செங்கல்பட்டு சிங்கபெருமாள்கோவில் தொடருந்து நிலையத்தில் நடைமேடையில் அமைதியாக மரணமடைந்தார்.[7] இவர் தனது வாழ்நாளின் கடைசி சில மணிநேரங்களை கடவுளை நினைத்து, தொழுகை செய்து, இராக தர்பாரியில் கல்மாவைப் படித்தார்.[2]

மேலும் படிக்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Tribute to a Maestro – Abdul Karim Khan". 4 May 2007. Archived from the original on 20 December 2008. பார்க்கப்பட்ட நாள் 29 April 2019.
  2. 2.0 2.1 2.2 Profile of Ustad Abdul Karim Khan on veethi.com website Updated 19 February 2014. Retrieved 29 April 2019
  3. 3.0 3.1 Profile of Abdul Karim Khan on calarts.edu website, Archived 13 May 2008. Retrieved 29 April 2019
  4. Profile of Ustad Abdul Karim Khan on weebly.com website. Retrieved 25 April 2017
  5. R.C. Mehta Eminent Musicians of YesterYears. Baroda, 2007. p. 3
  6. The Musical Legacy of Abdul Karim Khan The Wire website, Published 27 May 2016. Retrieved 25 April 2017
  7. "அப்துல் கரீம் கான்: இந்தியாவின் இசைச் சொத்து". www.hindutamil.in. பார்க்கப்பட்ட நாள் 2021-11-14.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்துல்_கரீம்_கான்&oldid=3579282" இலிருந்து மீள்விக்கப்பட்டது