அன்னா சுஜாதா மத்தாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அன்னா சுஜாதா மத்தாய் (Anna Sujatha Mathai) இந்தியாவைச் சேர்ந்த ஒரு கவிஞர் ஆவார். [1] [2]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

மத்தாய் சிரிய கிறிஸ்தவ பெற்றோருக்கு மகளாகப் பிறந்தார். மிராண்டா கல்லூரியில் ஆங்கில மொழி மற்றும் இலக்கியத்தில் இளங்கலைப் பட்டமும் , எடின்பரோ பல்கலைக்கழகத்தில் சமூக ஆய்வுகளில் முதுகலைப் பட்டமும் பயின்றார். இவர் இங்கிலாந்தில் சமூக ஆய்வுகள் துறையில் சில ஆண்டுகள் பணியாற்றினார்.

இலக்கிய படைப்புகள்[தொகு]

மத்தாயின் இன் தெயர் ஓன் வாய்ஸ் என்பது ஆர்லேன் ஆர் . கே. சைட் என்பவரால் 1993இல் தொகுக்கப்பட்டது. பின்னர் போஸ்ட் - இண்டிபெண்டன்ஸ் போயட்ரி பை இண்டியன்ஸ் என்பதனை அருந்ததி சுப்பிரமணியம் ( சாகித்ய அகாடமி ) தொகுத்துள்ளார். [3] [4]

இவரது கவிதைகளில் சில இந்திய மற்றும் ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

புத்தகங்கள்[தொகு]

மத்தாய் ஐந்து கவிதைத் தொகுப்புகளை ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளார்.

  • குரூசிபிகேசன்ஸ் (1970) எழுத்தாளர்கள் பட்டறை, கல்கத்தா
  • வி தி அன்ரான்சில்ட் (1972) எழுத்தாளர்கள் பட்டறை, கல்கத்தா
  • தி அட்டிக் ஆஃப் நைட் (1991) ரூபா & கோ. புது தில்லி
  • லைஃப் - ஆன் மை சைட் ஆஃப் தெ ஸ்ட்ரீட் (2005) சாகித்ய அகாடமி . (பெண்கள் கவிஞர்கள் 50 வது ஆண்டிற்காக காட்சிப்படுத்தப்பட்டது.
  • மதர்ஸ் வீணா அண்ட் தெ செலக்டட் போயம்ஸ் (2013)

சான்றுகள்[தொகு]

  1. "Walking in the dark". 2014-04-02. பார்க்கப்பட்ட நாள் 2018-02-15.
  2. "Indian Poetry Anthology". 2018-02-15. Archived from the original on 2015-10-06. பார்க்கப்பட்ட நாள் 2018-02-15.
  3. "About Author". 2018-02-15. பார்க்கப்பட்ட நாள் 2018-02-15.
  4. "Her Poems". 2018-02-15. பார்க்கப்பட்ட நாள் 2018-02-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்னா_சுஜாதா_மத்தாய்&oldid=3603337" இலிருந்து மீள்விக்கப்பட்டது