அத்துவாக் கட்டளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அத்துவாக் கட்டளை என்பது ஒரு சிறிய நூல். இது உரைநடையில் உள்ளது.

அத்துவா என்பது ஒரு சமயநெறி. இதில் வழி, மந்திரம், பதம், வண்ணம், புவனம், தத்துவம் என்னும் ஆறு அத்துவாக்கள் உள்ளன. இவற்றை விளக்குவது இந்த நூல்.

அத்துவா என்பது வடமொழித்தொடர். ‘துவா’ என்றால் இரண்டு. ‘அத்துவா’ என்றால் இரண்டாக இல்லாமை. அதாவது ஒன்று. தானும் இறைவனும் ஒன்று, தனக்குள்ளை இறைவன், இறைவனுக்குள்ளே தான் எனக் காணும் நெறி அத்துவாநெறி. [1]

திருமந்திரம் எட்டாம் தந்திரத்தில் அத்துவாக்கள் பற்றிக் கூறும் மூன்று பாடல்கள் உள்ளன. [2] [3]

இவற்றையும் காண்க[தொகு]

மேற்கோள்[தொகு]

  1. மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 2, 2005
  2. திருமூலர் இயற்றிய திருமந்திரம், திருப்பனந்தாள், காசி மடம் பதிப்பு, 2003, எட்டாம் தந்திரம், தலைப்பு 5 அத்துவாக்கள். பக்கம் 290, 2184 - 2186 பாடல்கள்
  3. 2184
    தத்துவம் ஆறாறு தன்மனு ஏழ்கோடி
    மெய்த்தரு வன்னம்ஐம் பான்ஒன்று மேதினி
    ஒத்துஇரு நூற்றுஇரு பான்நான்குஎண் பான்ஒன்று
    வைத்த பதம்கலை ஓர்ஐந்தும் வந்தவே. 1

    2185
    நாடிய மண்டலம் மூன்றும் நலந்தெரிந்து
    ஓடும் அவரோடு உள்இரு பத்துஐஞ்சும்
    கூடுவர் கூடிக் குறிவழி யேசென்று
    தேடிய பின்னர்த் திகைத்திருந் தார்களே. 2

    2186
    சாக்கிர சாக்கிர மாதித் தலையாக்கி
    ஆக்கிய தூலம் அளவாக்கி அதீதத்துத்
    தாக்கிய அன்பான தாண்டவம் சார்ந்துஅது
    தேக்கும் சிவமாதல் ஐந்தும் சிவாயவே. 3

"https://ta.wikipedia.org/w/index.php?title=அத்துவாக்_கட்டளை&oldid=3330210" இலிருந்து மீள்விக்கப்பட்டது