அத்தி குண்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அத்தி குண்டா
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருஷ்ணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்635121

அத்தி குண்டா (Athigunda) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும். இது மாதேப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஊராகும்.

பெயராய்வு[தொகு]

அத்தி என்னும் கன்னடச் சொல்லுக்கு யானை என்பது பொருள். இப்பகுதியில் உள்ள குட்டைகளுக்கு நீர் அருந்த யானைகள் வந்திருக்கும். அதனால் இவ்வூருக்கு இந்தப் பெயர் வந்திருக்கலாம் என்கிறார் கோ. சீனிவாசன்.[1]

அமைவிடம்[தொகு]

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான கிருஷ்ணகிரியிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து 270 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[2]

மேற்கோள்[தொகு]

  1. முனைவர் கோ. சீனிவாசன், கிருஷ்ணகிரி ஊரும் பேரும். கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மையம், ஒசூர். 2018 திசம்பர். பக். 104. 
  2. "Athigunda Village , Veppanapalli Block , Krishnagiri District". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2023-02-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அத்தி_குண்டா&oldid=3657014" இலிருந்து மீள்விக்கப்பட்டது