அங்குத்தி சுனை அருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அங்குத்தி சுனை அருவி (Anguthi sunai water falls) என்பது தமிழ்நாட்டின், சவ்வாது மலை அடிவாரத்தில் உள்ளது.[1] சவ்வாது மலை வேலூர் மாவட்டத்துக்கு உட்பட்டதாக இருந்தாலும், இந்த அருவி அமைந்துள்ள சவ்வாது மலை அடிவாரம் கிருட்டிணகிரி மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியாகும். இது கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டை - திருப்பத்தூர் சாலையில் சிங்காரப்பேட்டையில் இருந்து 7வது கி.மீட்டரில் அமைந்துள்ள கோவிந்தாபுரம் எனும் கிராமத்தில் இருந்து கிழக்கே செல்லும் சாலையில் 5வது கி.மீட்டரில் ஜவ்வாது மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது.[2]

சிறப்பு[தொகு]

இந்த இடம் ஜவ்வாது மலை அடிவாரத்தில் மக்கள் அதிக நடமாட்டம் இல்லாத பகுதியில் அமைந்துள்ளதால் சுற்றுச் சூழல் பாதுகாப்பு மிக்க இடமாக அறிவிக்கப்பட்டு வனத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகிறது.

சுற்றுலாப் பயணிகளால் பார்க்கப்படும் இடங்கள்[தொகு]

  • சஞ்சீவிராயன் திருக்கோயில்
  • திரௌபதி அம்மன் திருக்கோயில்
  • முருகன் திருக்கோயில்

ஒளிப்படத் தொகுப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "TNFOREST :: Tamil Nadu Forest Department". www.forests.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2022-09-25.
  2. Sabarish (2018-06-14). "காகங்களை அலற வைக்கும் அங்குத்தி அருவி ! பாண்டவர்களின் சாபமும், பின்னணியும்..!". https://tamil.nativeplanet.com. பார்க்கப்பட்ட நாள் 2022-09-25. {{cite web}}: External link in |website= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அங்குத்தி_சுனை_அருவி&oldid=3629413" இலிருந்து மீள்விக்கப்பட்டது