அகரம் பாலமுருகன் கோயில்
அகரம் பாலமுருகன் கோயில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | கிருஷ்ணகிரி |
அமைவிடம்: | அகரம், ஓசூர் வட்டம் |
சட்டமன்றத் தொகுதி: | ஓசூர் |
மக்களவைத் தொகுதி: | கிருஷ்ணகிரி |
கோயில் தகவல் | |
மூலவர்: | பாலமுருகன் |
தாயார்: | வள்ளி, தெய்வானை |
சிறப்புத் திருவிழாக்கள்: | ஆடிக் கார்த்திகை நவராத்திரி கார்த்திகை விளக்கீடு தேர்த்திருவிழா |
அகரம் பாலமுருகன் கோயில் என்னும் கோயில் கிருட்டிணகிரி மாவட்டம் ஒசூர் இராயக்கோட்டை சாலையில் உள்ள அகரம் என்ற ஊரில் உள்ள முருகன் கோயில் ஆகும்.[1] இக்கோயில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது.
வரலாறு[தொகு]
இவ்வூரில் நெடுஞ்சாலை ஒட்டி உள்ள இக்கோயில் சுமார் 500 ஆண்டுகள் பழமையானதாகும். இக்கோயியில் குளத்துடன் அமைந்திருந்தது. கோயிலை புதுப்பிக்க எண்ணியவர்கள் ஏதோ ஒரு காரணத்தால் இக்கோயிலுக்கு பக்கத்திலேயே புதியதாக ஒருகோயிலைக்க்ட்டி வழிபாடு நடத்தி வருகின்றனர்.
அமைப்பு[தொகு]
கோயில் வளாகத்தில் விநாயகர், வள்ளி தெய்வானை உடனுறை சுப்பிரமணியர், சிவன் நவக்கிரகங்கள் சன்னதிகள் உள்ளன. மகாமண்டபத்தில் உள்ள உற்சவர் சன்னதியில் பாலமுருகனையும், வள்ளி தெய்வானை உடனுறை முருகனையும் காணலாம்.
விழாக்கள்[தொகு]
ஒவ்வோராண்டும் ஆடிக் கார்த்திகை அன்று பாலமுருகனுக்கு அபிசேக ஆராதனைகளும் சந்தனக் காப்பு அலங்காரத்துடன் சிறப்பு பூசைகள் செய்யப்படுகின்றன. புரட்டாசி அமாவாசையை அடுத்துவரும் 9 நாட்கள் நவராத்திரி விழாவாக கொண்டாடப்பட்டு, விஜயதசமியன்று உற்சவரின் ஊர்வலம் நடக்கிறது. கார்த்திகை தீபத்தன்று சிறப்பு வழிபாடு நடக்கிறது அன்று சொக்கப்பனை கொளுத்தப்படுகிறது. தைபூசத்தன்று தேர்திருவிழா நடக்கிறது.[2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில்". கட்டுரை. தினமலர். பார்க்கப்பட்ட நாள் 3 சூலை 2018.
- ↑ திருக்கோயில்கள் வழிகாட்டி கிருஷ்ணகிரி மாவட்டம். தர்மபுரி: தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை. 2014 ஆகத்து. பக். 55.