பெரியமேளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெரியமேளம் என்ற தோலிசைக் கருவியை இசைத்து ஆடுவதால், பெரிய மேளம் என்று அழைக்கப்படுகிறது. பெரிய மேளம் என்ற இசைக்கருவியோடு தமரு, சட்டி, தமுக்கு, ஜால்ரா ஆகிய கருவிகளும் இசைக்கப்படும். குறைந்தது ஏழுபேர் இக்கலையை நிகழ்த்துவர். இதை மேளசெட்டு என்பார்கள். பெரியமேளம் பத்து கிலோ எடைகொண்டதாக இருக்கும். ஒவ்வோர் அடி முறையையும் பாகம் என்கிறார்கள். மொத்தம் பத்துவிதமான பாகம் உண்டு.

பாகமுறை[தொகு]

முதல் பாகத்தில் எல்லாவிதமான பாகங்களையும் முன்னோட்டமாக நிகழ்த்திக் காட்டுவார்கள். இரண்டாவது பாகம் என்பது எல்லா பொது விழாக்களின்போதும் மூன்றாவது பாகம் திருமண விழாக்களின்போதும் நான்காவது பாகம் கங்கையம்மனுக்குக் கூழ் ஊற்றும்போதும் ஐந்தாவது பாகம் வேகமான திரைப்படப் பாடலுக்கும் ஆறாம் பாகம் மாரியம்மனுக்குக் கூழ்வார்க்கும்போதும், பொங்கலின்போது ஏழாம் பாகமும் ,புலியாட்டத்திற்கு எட்டாம் பாகமும், ஒன்பதாம் பாகமும் வாசிக்கப்படுகிறது. தமிழகத்தின் வடமாவட்டங்களில் இக்கலை பரவலாக நிகழ்த்தப்படுகிறது.

பார்க்க[தொகு]

நாதசுவரம்#பெரியமேளம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரியமேளம்&oldid=1698394" இலிருந்து மீள்விக்கப்பட்டது