எம். பௌசர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எம். பௌசர் ஈழத்தின் முஸ்லிம் கவிஞர்களுள் முக்கியமானவர். கிழக்கிலங்கையைச் சேர்ந்த பௌசர் மூன்றாவது மனிதனின் ஆசிரியராகவே இலக்கிய உலகில் பரவலான அறிமுகம் பெற்றுள்ளார். மூன்றாவது மனிதன் வெளியீட்டகத்தின் மூலம் பல தரமான நூல்களையும் வெளியிட்டுள்ளார். மூன்றாவது மனிதனுக்காக குறிப்பிடத்தக்க நேர்காணல்களைத் தொகுத்து நூலாக்கி வெளியிட்டுள்ளார். முஸ்லிம் குரல் எனும் பத்திரிகையின் ஆசிரியரும் இவரே.

இதழியல் பங்களிப்பு[தொகு]

  • மூன்றாவது மனிதன் சஞ்சிகையின் ஆசிரியர்
  • லண்டனில் இருந்து தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் எதுவரை சஞ்சிகையின் ஆசிரியராக உள்ளார்.

இவரது நூல்கள்[தொகு]

  • எழுதுவதைத் தவிர வேறு வழியில்லை (கவிதைகள்)


"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._பௌசர்&oldid=2106859" இலிருந்து மீள்விக்கப்பட்டது