மா. பாலகிருஷ்ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இளங்கண்ணன் என்ற புனைபெயரில் எழுதும் மா. பாலகிருஷ்ணன் சிங்கப்பூரின் ஒரு மூத்த தமிழ் எழுத்தாளர். இவர் 40 ஆண்டுகளுக்கு மேலாக நாவல்கள், சிறுகதைகள் எழுதி வெளியிட்டுள்ளார்.

இளங்கண்ணன் தென்கிழக்காசிய எழுத்து விருது (1982), சிங்கப்பூர் இலக்கிய விருது (2004), கலாசாரப் பதக்க விருது (2005) போன்ற மதிப்புமிக்க விருதுகள் பெற்றுள்ள எழுத்தாளர். அனைத்துலக அளவில் பல சிறுகதைப் போட்டிகளில் பரிசுகளை வென்றவர். இளங்கண்ணனின் படைப்புகள் குறித்து டில்லி பல்கலைக்கழகத்தில் நவீன இலக்கியத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றிய டாக்டர் ரவீந்திரன் ஆய்வு நூல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மா._பாலகிருஷ்ணன்&oldid=3224280" இலிருந்து மீள்விக்கப்பட்டது