ஏ. வி. எம். ஜபார்தீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஏ. வி. எம். ஜபார்தீன் பிரிம்ரோஸ் கார்டன் சீமான் சீனிவாசன் சாலை ஆழ்வர்பேட்டை சென்னையில் பிறந்த இவர் ஒரு இலக்கியப் புரவலரும், “சமநிலைச் சமுதாயம்” இதழைப் பொருள் நோக்கமின்றிச் சக விழிப்புணர்ச்சிக்காக மிகச் சிறப்பாக நடத்தி வருபவரும், சீறாப்புராணத்துக்குக் கவி கா. மு. செரீப், முனைவர் மு. அப்துல் கரீம் ஆகியோரின் உரையோடு அழகாகப் பதிப்பித்து வெளியிட்டவரும், 6வது உலக இஸ்லாமியத் தமிழிலக்கிய மாநாட்டைச் சென்னையில் சிறப்பாக நடத்தியவரும், ‘இஸ்லாம் வளர்த்த தமிழ்’, ‘தற்கால இஸ்லாமியத் தமிழ் இலக்கியம்’ ஆகிய கழக வெளியீடுகளின் பொருட் செலவை முழுமையாக ஏற்றுக்கொண்ட வருமாவார்.

பெற்ற விருதுகளும் கௌரவங்களும்[தொகு]

  • தமிழ் மாமணி விருது

உசாத்துணை[தொகு]

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._வி._எம்._ஜபார்தீன்&oldid=2716356" இலிருந்து மீள்விக்கப்பட்டது