தாயம்மாள் அறவாணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தாயம்மாள் அறவாணன் (பிறப்பு: மே 23 1944 தமிழக எழுத்தாளர், சேந்தன்புதூர் எனுமிடத்தில் பிறந்த இவர் கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவரும், 18க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவரும், பெண்ணியம் தொடர்பாக பல நூல்களை எழுதி மகளிர் பல்கலைக்கழகத்துக்குப் பெருமை சேர்த்து வருபவரும், அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் நிகழ்த்தி வருபவருமாவார். மேலும் இவர் 'ஆதிமந்தி முதல் ஆண்டாள் வரை' உள்ள பெண்பாற் புலவர்கள் பற்றி ஆய்வுசெய்து 685 பக்க நூலாக, பெண் புலவர் களஞ்சியமாக உருவாக்கியுள்ளவருமாவார்.

பெற்ற விருதுகளும் கௌரவங்களும்[தொகு]

  • இந்தியப் பல்கலைக்கழகத் தமிழ் ஆசிரியர்மன்றம் வழங்கும் நூல்கள், கட்டுரைகளுக்கான பரிசில்கள்
  • 2016 ஆம் ஆண்டில் தாயம்மாள் அறவாணனின் ‘அவ்வையார் படைப்பு களஞ்சியம்’ என்ற நூலுக்கு சி. பா. ஆதித்தனார் இலக்கிய பரிசை தினத்தந்தி செய்தித் தாள் நிறுவனம் வழங்கிச் சிறப்பித்தது.[1]

உசாத்துணை[தொகு]

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
  1. http://www.dailythanthi.com/News/India/2016/09/27235148/Cipa-Adithanar-Literary-Awards-Ceremony-aruko--tayammal.vpf
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாயம்மாள்_அறவாணன்&oldid=2624361" இலிருந்து மீள்விக்கப்பட்டது