நூர் முகம்மது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நூர் முகம்மது (பிறப்பு: டிசம்பர் 21 1942) தமிழ்நாட்டில் பிறந்த இவர் சிங்கப்பூரில் வசித்து வந்தார்.

இலக்கியப் பணி[தொகு]

சிறுகதை, புதுக்கவிதை, நாடகம், கட்டுரை என பல்துறைகளிலும் ஈடுபாடுமிக்க இவரின் முதல் ஆக்கம் ‘முகலாய வரலாற்றில் வாலாட்டமா’? எனும் தலைப்பில் மலாயா நண்பன் பத்திரிகையில் பிரசுரமாயுள்ளது. அதைத் தொடர்ந்து பல பத்திரிகையில் எழுதியுள்ளார்.

தொழில் நடவடிக்கை[தொகு]

தமிழ், மலாய் போன்ற மொழிகளில் நன்கு தேர்ச்சிபெற்றிருந்த இவர் பலசரக்கு மளிகைத் தொழிலாளராகப் கடமை புரிந்துவந்தார்.

பதவிகள்[தொகு]

இவர் தமிழ் முஸ்லிம் யூனியன் கலாசாரப் பிரிவு மற்றும் தமிழ் முஸ்லிம் ஜமாத் போன்றவற்றில் பதவி வகித்துள்ளார்.

பெற்ற விருதுகளும், கௌரவங்களும்[தொகு]

யார் அந்தப் பெரியார்? எனும் கட்டுரைக்கான 2ம் பரிசு

உசாத்துணை[தொகு]

  • சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் - சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக வெளியீடு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நூர்_முகம்மது&oldid=2713084" இலிருந்து மீள்விக்கப்பட்டது