நியதிக் கொள்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நியதிக் கொள்கை அல்லது இயற்கை முடிவுக்கொள்கை என்பது அண்ட நிகழ்வுகள் யாவும் வரையறைசெய்யப்பட்ட தன்மை கொண்டவை என்பதை வாதிடும் மெய்யியல் கருதுகோள் ஆகும்.

கருத்து நிலைகள்[தொகு]

நியதிக் கொள்கையில் பல கருத்து நிலைகள் உள்ளன. அடிப்படை இயற்கை விதிகள் அண்டத்தை நிர்வாகிக்கின்றன. ஆனால், அந்த விதிகளில் வரையறை செய்யப்படாத நிகழ்வுகளும் நிலைகளும் அடங்கும் என்பது ஒரு கருத்து நிலை. குறிப்பாக மனித செயற்பாடுகள் என வரும்போது, மனிதர் சிந்தனையற்று இயங்கும் அணுக்கள் போல் அல்லாமல், அண்டத்தில் முடிவெடுத்து இயங்கக் கூடியவர்கள் என்பதை ஏற்றும், அதையும் அண்டத்தின் அடிப்படை நியதியாக கொள்ளவதும் டானியல் டெனற் போன்ற மெய்யிலாளர்களின் நிலைப்பாடு ஆகும்.

நியதிக் கொள்கை என்பது உலக நிகழ்வுகளின் ஒவ்வொரு கணமும் அல்லது நிலையும் முன்பே முடிவாகிவிட்ட, மாற்றப்படமுடியாதாவை என்பது இன்னொரு கருத்துநிலை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நியதிக்_கொள்கை&oldid=3330049" இலிருந்து மீள்விக்கப்பட்டது