கருவூர் நன்மார்பனார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கருவூர் நன்மார்பனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான அகநானூற்றில் இவரது பாடல் ஒன்று உள்ளது. (பாலைத் திணை)யில் அமைந்த இப்பாடல் 277ஆம் வரிசையில் உள்ளது.

பாடல் தரும் செய்தி[தொகு]

முருக்கம் பூ பூத்திருக்கும் வேனில் காலம் வந்துவிட்டது. பொருள் ‌தேடிச்சென்ற தலைவன் தன்னைத் தேடி இன்னும் வரவில்லையே என்று தலைவி தோழியிடம் அங்கலாய்க்கிறாள்.

உவமை நலன்கள்[தொகு]

  • தலைவன் பிரிவால் தலைவியின் நெற்றி சாம்பிப் போயிற்று. பகல் போல ஒளி வீசிய நெற்றி மாலைக்காலம் போலச் சாம்பிவிட்டதாம்.
  • முள்ளம்பன்றியின் முள்படிவு (பரூஉமயிர்) பனைமரத்தின் செறும்பு போல் இருக்குமாம்.
  • மனை உறை சேவல் கோழியின் கழுத்து மயிர் தீ கொழுந்து விட்டு எரிவது போல இருக்குமாம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருவூர்_நன்மார்பனார்&oldid=3178252" இலிருந்து மீள்விக்கப்பட்டது