விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/மே 10, 2009
- மனித உரிமைகளுக்கான ஆசிய மையத்தின் 2008 தெற்காசியா மனித உரிமைகள் மீறல்கள் சுட்டெண் அடிப்படையில் தெற்காசியாவில் இலங்கையே மிக மோசமான அதிகமான மனித உரிமை மீறல்கள் நடைபெறும் நாடு.
- உடலின் 2% நிறை உடைய மூளை ஒருவரின் 20% ஆற்றலையும், ஆக்சினையும் பயன்படுத்துகிறது.
- உலக நாடுகளின் மக்கள் தொகையில் அதிக விழுக்காடு (21% - 27.4/127.8 மில்லியன்) முதியோரைக் கொண்ட நாடு யப்பான் ஆகும்.
- முதன்முதலில் ஒலி ஒலிப்பதிவு உருளையில் (1888) பதிவு செய்யப்பட்டது, பின்னர் வெள்ளீயத் தகட்டிலும் (1894), ஒலி நாடாவிலும் (1983), இறுவட்டிலும் (1982) பதியப்பட்டு, தற்போது எம்.பி.3 போன்ற எண்மிய முறையில் பதியப்படுகிறது.
- 1931 ம் ஆண்டில் வெளிவந்த காளிதாசு தமிழில் வெளிவந்த முதல் பேசும் திரைப்படம் ஆகும்.