அமலனாதிபிரான் வியாக்கியானம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அமலனாதிபிரான் என்பது திருப்பாணாழ்வார் பாடிய பதிகம். இது திவ்விய பிரபந்தத்தில் இடம் பெற்றுள்ளது. இந்தப் பதிகத்துக்கு வேதாந்த தேசிகர் எழுதிய விரிவுரை அமலனாதிபிரான் வியாக்கியானம் என்னும் பெயரோடு வைணவர்களால் பெரிதும் போற்றப்படுகிறது.

  • இந்த நூலுக்கு இவர் 'முனிவாகனபோகம்' எனப் பெயரிட்டார்.

பெரியவாச்சான் பிள்ளை நாலாயிர திவ்விய பிரபந்தம் நூல் முழுமைக்கும் விரிவுரை (வியாக்கியானம்) எழுதியுள்ளார். இருப்பினும் பெரியாழ்வார் திருமொழி முதல் நான்கு பத்துக்கும் எழுதிய இவரது வியாக்கியானம் இப்போது கிடைக்கவில்லை.

பெரியவாசான் பிள்ளைக்கும் வேதாந்த சேசிகருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது.

  • இந்த நூலின் காலம் 13ஆம் நூற்றாண்டு.

கருவிநூல்[தொகு]