வீ. செல்வத்துரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வீ. செல்வத்துரை (பிறப்பு: பிப்ரவரி 29 1936) மலேசியாவில் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவராவார். கிரேக்கொ, திக்காசுக்கு, அஞ்சலட்டை போன்ற புனைப்பெயர்களில் அறியப்பட்டவரான இவர், ஓய்வு பெற்ற அஞ்சல் அதிகாரியுமாவார்.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1958 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். சிறுகதைகள், கட்டுரைகள், ஆகியவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. "கோமாளி", "மக்கள் ஓசை" இதழ்களில் தொடர் கட்டுரை எழுதியுள்ளார்.

பரிசில்களும், விருதுகளும்[தொகு]

தங்கப் பதக்கம் - செலாங்கூர், கூட்டரசுப் பிரதேச எழுத்தாளர் வாசகர் இயக்கம்

உசாத்துணை[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=வீ._செல்வத்துரை&oldid=3229030" இலிருந்து மீள்விக்கப்பட்டது