இயல்புச் சொல்வழக்கு
சொற்களையும் சொற்றொடர்களையும் வேறு பொருள் தருமாறு தகுதியாக்கிப் பயன்படுத்தாமல் உள்ளபடி வழங்குதல் இயல்புச் சொல்வழக்கு எனப்படும்.
வகைகள்[தொகு]
இலக்கணம் உடையது, இலக்கணப் போலி, மரூஉ என்பன இயல்பு வழக்கில் அமைந்தவை.
- இலக்கணம் உடையது
இலக்கணத்தின்படி அமைந்த சொற்கள்.
- வளம், இன்பம், களவு போன்ற தனிமொழிகள்
- மாநிலம், நற்றிணை போன்ற தொடர்மொழிகள்
- இலக்கணப்போலி
தொடர்மொழிகளின் வரிசையை மாற்றி வழங்குதல் இலக்கணப்போலியாகும்.
எ.கா.:
- இல்முன், நகர்புறம் என்பவற்றை முன்றில், புறநகர் என்று வழங்குதல்
- மரூஉ
கிளவிகளை எழுத்துக்குறைத்தும் திரித்தும் வழங்குதல் மரூஉ எனப்படும்.
எ.கா.:
- யாவர் - யார்
- இந்நாடு - இந்தநாடு
நன்னூல் பாடல்[தொகு]
நன்னூலின் பாடல் 267 சொல் வழக்கைப் பற்றி உரைக்கிறது. அப்பாடல் கீழே தரப்பட்டுள்ளது.
இலக்கணம் உடையது இலக்கணப் போலி மரூஉஎன்று ஆகும் மூவகை இயல்பும் இடக்கர் அடக்கல் மங்கலம் குழூஉக்குறி எனும்முத் தகுதியோடு ஆறாம் வழக்கியல்.
இவற்றையும் பார்க்கவும்[தொகு]
உசாத்துணை[தொகு]
- மணிவாசகன், அடியன் (நவம்பர் 2007). தவறின்றித் தமிழ் எழுத பவணந்திமுனிவர் இயற்றிய நன்னூல் புதிய அணுகுமுறையில். சென்னை: சாரதா பதிப்பகம். பக். 183-184.