இயல்புச் சொல்வழக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சொற்களையும் சொற்றொடர்களையும் வேறு பொருள் தருமாறு தகுதியாக்கிப் பயன்படுத்தாமல் உள்ளபடி வழங்குதல் இயல்புச் சொல்வழக்கு எனப்படும்.

வகைகள்[தொகு]

இலக்கணம் உடையது, இலக்கணப் போலி, மரூஉ என்பன இயல்பு வழக்கில் அமைந்தவை.

இலக்கணம் உடையது

இலக்கணத்தின்படி அமைந்த சொற்கள்.

எ.கா.:

வளம், இன்பம், களவு போன்ற தனிமொழிகள்
மாநிலம், நற்றிணை போன்ற தொடர்மொழிகள்
இலக்கணப்போலி

தொடர்மொழிகளின் வரிசையை மாற்றி வழங்குதல் இலக்கணப்போலியாகும்.

எ.கா.:

இல்முன், நகர்புறம் என்பவற்றை முன்றில், புறநகர் என்று வழங்குதல்
மரூஉ

கிளவிகளை எழுத்துக்குறைத்தும் திரித்தும் வழங்குதல் மரூஉ எனப்படும்.

எ.கா.:

யாவர் - யார்
இந்நாடு - இந்தநாடு

நன்னூல் பாடல்[தொகு]

நன்னூலின் பாடல் 267 சொல் வழக்கைப் பற்றி உரைக்கிறது. அப்பாடல் கீழே தரப்பட்டுள்ளது.

இலக்கணம் உடையது இலக்கணப் போலி
மரூஉஎன்று ஆகும் மூவகை இயல்பும்
இடக்கர் அடக்கல் மங்கலம் குழூஉக்குறி
எனும்முத் தகுதியோடு ஆறாம் வழக்கியல்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணை[தொகு]

  • மணிவாசகன், அடியன் (நவம்பர் 2007). தவறின்றித் தமிழ் எழுத பவணந்திமுனிவர் இயற்றிய நன்னூல் புதிய அணுகுமுறையில். சென்னை: சாரதா பதிப்பகம். பக். 183-184. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இயல்புச்_சொல்வழக்கு&oldid=302283" இலிருந்து மீள்விக்கப்பட்டது