கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழ்நாடு சட்டமன்ற மேலவைதமிழ்நாடு சட்டமன்றம் ஈரங்க அவையாக இருந்த காலகட்டத்தில் அதன் மேலவையாக இருந்தது. மாநிலச் சட்ட மேலவை வகையைச் சேர்ந்த இவ்வையின் உறுப்பினர்கள் நேரடி மற்றும் மறைமுகத் தேர்தல்கள் மூலமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் ஒரு சில உறுப்பினர்கள் தமிழ்நாட்டு ஆளுனரால் நியமிக்கப்பட்டனர். 1986ம் ஆண்டு கலைக்கப்பட்ட இந்த அவை, 2010ம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட ஒரு சட்டத்தின் மூலம் மீண்டும் அமைக்கப்பட்டது. ஆனால் 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஜெ. ஜெயலலிதா தமிழக முதல்வரான பின்னர், இம்மீட்டுருவாக்கம் கைவிடப்பட்டது.[1] மேலவை ஒரு நிரந்தர அமைப்பு; கலைக்கப்படக் கூடியதல்ல. ஆறாண்டுகள் பதவிக் காலம் கொண்ட இதன் உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கினர் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை பதவி ஓய்வு பெறுகின்றனர். இவ்வையின் உறுப்பினர் எண்ணிக்கை குறைந்தபட்சம் 40, அதிகபட்சம் 78.[2][3][4] 2010-11 காலகட்டத்தில் மேலவையை மீட்டுருவாக்க முயற்சிகள் நடைபெற்ற போது அதற்காக உருவாக்கப்பட்ட தொகுதிகள் இக்கட்டுரையில் தரப்பட்டுள்ளன.
உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட முறைகள் கீழிலுள்ள பட்டியலில் தரப்பட்டுள்ளன.[5][6]
விகிதம்
தேர்ந்தெடுக்கும் முறை
1/6
கலை, அறிவியல், இலக்கியம், கூட்டுறவு, சமூக சேவை போன்ற துறைகளில் தலைசிறந்த பணியாற்றியவர்கள்; அமைச்சரவையின் பரிந்துரையின் பேரில் ஆளுநரால் நியமிக்கப்படுவர்
1/3
சட்டமன்ற கீழவையின் உறுப்பினர்களால் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர்
1/3
மாநகராட்சிகள், நகராட்சிகள் போன்ற உள்ளாட்சி அமைப்புகளால் தேர்ந்தெடுக்கப்படுவர்
1/12
இளங்கலைப் பட்டம் பெற்ற பட்டதாரிகளால் தேர்ந்தெடுக்கப்படுவர்.
1/12
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களால் தேர்ந்தெடுக்கப்படுவர்